செய்திகள் :

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

post image

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, பாதுகாப்புக்காக சென்ற போலீஸார் மற்றும் ரௌடி வெள்ளைக்காளி ஆகியோர், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு கார்களில் அங்கு வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.

வெள்ளைக்காளி

இதில், மூன்று போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட திருச்சி சரக ஐ.ஜி பாலகிருஷ்ணன், "திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். வாகனங்களில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீஸார் இருந்தனர். இடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர்கள் வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். அப்போது, பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் உடனடியாக குற்றவாளியை பாதுகாத்தார்.

போலீஸ் எஸ்கார்டு எஸ்.ஐ, உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தப்பி சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

balakirushnan

இந்நிலையில், இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக ரௌடி அழகுராஜா என்பவரை போலீஸார் கைது செய்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில்தான், கைதான அழகுராஜா அவன் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை தேடுவதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுடப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகுராஜா தாக்கியதில் ஒரு போலீஸூக்கு அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். பிரபல ரௌடி மீது நாட்டுவெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் இடுப்பட்டதாக சொல்லப்பட்ட ரௌடி ஒருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ... மேலும் பார்க்க

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்... மேலும் பார்க்க

வேறொருவரை மணந்ததால் ஆத்திரம்; காதலனின் மனைவிக்கு HIV ரத்தம் செலுத்திய இளம்பெண்; அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம், கர்னூல் என்ற இடத்தை சேர்ந்தவர் வசுந்தரா(34). இவர் டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த டாக்டர் வசுந்தராவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் த... மேலும் பார்க்க