செய்திகள் :

ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ - இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

post image

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிலட்சுமி (7) மரணமடைந்தார். மற்றொரு குழந்தையான யதுகிருஷ்ணா (4) மரணமடைந்த தகவல் சற்று தாமதமாக தெரியவந்தது.

விபத்தில் மரணமடைந்த குழந்தை ஆதிலட்சுமி

அந்த ஆட்டோவில் பயணித்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான் அதில் யதுகிருஷ்ணா(4) என்ற குழந்தையை காணவில்லை என பெற்றோர் கதறினர். இதையடுத்து விபத்து நிகழ்ந்த ஓடையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தேடினர். நேற்று இரவு இறந்த நிலையில் யது கிருஷ்ணாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த குழந்தைகளின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

பலியான யதுகிருஷ்ணா

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், "ஆதிலட்சுமியும், யது கிருஷ்ணாவும் ஆட்டோவில் இருந்து தெறித்து வெளியே விழுந்துள்ளனர். ஆதிலட்சுமி மீது ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், காப்பாற்ற முடியவில்லை. யதுகிருஷ்ணா தெறித்து ஓடை தண்ணீரில் விழுந்துவிட்டார். யதுகிருஷ்ணாவை யாரும் கவனிக்கவில்லை. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக நினைத்தனர். யதுகிருஷ்ணாவின் பெற்றோர் கூறியபிறகே சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த குழந்தையை தேடத்தொடங்கினர். ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும்" என்றனர்.

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க