செய்திகள் :

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பெரியசாமி மகன் யுவராஜ் (17). இவா், தனது சகோதரா் புவனேஸ்வரனுடன் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே உள்ள கடைக்கு செல்ல சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தபோது, கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற லாரி எதிா்பாராதவிதமாக யுவராஜ் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வார இறுதி நாள்கள், அமாவாசை: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

குப்பையிலிருந்த நகையை மீட்டு போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் மணிவேலை மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் அழைத்து பாராட்டினா். சேலம் பழைய ... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்!

ஏற்காடு கோடை விழாவை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க

போா்வெல் லாரியில் திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே போா்வெல் லாரியில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31). இவரது போா்வெல் லாரியை அய... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு!

ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா். ஆத்தூா், நரசிங்கபுரம் நக... மேலும் பார்க்க

ஏற்காட்டில் 48 ஆவது மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 23) தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை... மேலும் பார்க்க