செய்திகள் :

வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்!

post image

நாளுக்கு நாள் வங்கதேசத்தில் நிலைமை மோசமாகி வருகிறது.

2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் முன்னாள் அதிபரான ஷேக் ஹசீனாவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவத் தலைவர்களில் முக்கியமான ஒருவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி. இவர் கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். மலேசியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.

இது வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றியுள்ளது.

இந்தியா, வங்கதேசம்
இந்தியா, வங்கதேசம்

என்ன கோபம்?

ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தான் அடைக்கலம் கொடுத்துள்ளது என்று ஏற்கெனவே வங்கதேசம் கோபத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஷெரீப்பை சுட்டுக் கொன்றதற்கு பின்னும், இந்தியா தான் உள்ளது என்று வங்கதேசம் கைகாட்டுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று, வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்களை குறி வைக்கின்றனர் வங்கதேச போராட்டக்காரர்கள். இதுவரை இந்தச் சம்பவத்தினால் 5 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா என்ன சொல்கிறது?

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இரு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் இந்துக்களைக் குறி வைப்பது மூலம் அவர்கள் இந்தியா மீதான கோபத்தைத் தான் வெளிப்படுத்துகின்றனர்.

'இது மிக கவலைக்குரியது' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் - கலவரம்
வங்கதேசம் - கலவரம்

இந்தியாவிலும் பிரச்னை

வங்கதேசத்தில் நடக்கும் இந்தச் சம்பவம் இந்தியாவில் மெல்ல மெல்ல எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அங்கே இந்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இந்தியாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தச் சம்பவம் நிச்சயம் மேற்கு வங்கத்தில் பெரிதாக எதிரொலிக்கும்.

இந்தியாவில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாவதற்கு முன்பு, இந்திய அரசு இதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்ப... மேலும் பார்க்க

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் எ... மேலும் பார்க்க

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க