செய்திகள் :

வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்!

post image

நாளுக்கு நாள் வங்கதேசத்தில் நிலைமை மோசமாகி வருகிறது.

2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் முன்னாள் அதிபரான ஷேக் ஹசீனாவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவத் தலைவர்களில் முக்கியமான ஒருவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி. இவர் கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். மலேசியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.

இது வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றியுள்ளது.

இந்தியா, வங்கதேசம்
இந்தியா, வங்கதேசம்

என்ன கோபம்?

ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தான் அடைக்கலம் கொடுத்துள்ளது என்று ஏற்கெனவே வங்கதேசம் கோபத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஷெரீப்பை சுட்டுக் கொன்றதற்கு பின்னும், இந்தியா தான் உள்ளது என்று வங்கதேசம் கைகாட்டுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று, வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்களை குறி வைக்கின்றனர் வங்கதேச போராட்டக்காரர்கள். இதுவரை இந்தச் சம்பவத்தினால் 5 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா என்ன சொல்கிறது?

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இரு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் இந்துக்களைக் குறி வைப்பது மூலம் அவர்கள் இந்தியா மீதான கோபத்தைத் தான் வெளிப்படுத்துகின்றனர்.

'இது மிக கவலைக்குரியது' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் - கலவரம்
வங்கதேசம் - கலவரம்

இந்தியாவிலும் பிரச்னை

வங்கதேசத்தில் நடக்கும் இந்தச் சம்பவம் இந்தியாவில் மெல்ல மெல்ல எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அங்கே இந்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இந்தியாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தச் சம்பவம் நிச்சயம் மேற்கு வங்கத்தில் பெரிதாக எதிரொலிக்கும்.

இந்தியாவில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாவதற்கு முன்பு, இந்திய அரசு இதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க