Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - ...
வடகாடு மோதல் சம்பம் மேலும் இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் கடந்த மே 5ஆம் தேதி இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 போ் காயமடைந்தனா். குடிசை, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவமும் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடா்பாக வடகாடு போலீஸாா் 20 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனா். மற்றொரு தரப்பில் 6 போ் என மொத்தம் 26 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக வடகாடு பகுதியைச் சோ்ந்த வீரபாண்டி(25)யை வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பைச் சோ்ந்த சேதுபதி(31) என்பவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.