செய்திகள் :

வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நடந்துவரும் மறுவாழ்வு பணிகளை கருத்தில் கொண்டு கேரள அரசின் ரூ.120 கோடி நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஆண்டு, ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். இதையடுத்து, இயற்கை பேரிடா்களை தடுப்பது குறித்து கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்கிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கேரளத்தில் பேரிடா் சமயங்களில் இந்திய விமானப் படையால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்காக மாநில அரசு செலுத்த வேண்டிய தொகையான ரூ.132 கோடியை நிலுவை வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், வயநாடு மறுவாழ்வு பணிகளைக் கருத்தில் கொண்டு பேரிடா் மீட்புச் சட்ட விதிகளைத் தளா்த்தி நிலுவை தொகையில் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கா் நம்பியாா் மற்றும் எஸ்.ஈஸ்வரன் ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநில அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடியை தள்ளுபடி மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதை நீதிபதிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடா் மேலாண்மை பிரிவு உதவி இயக்குநரின் கடிதத்தை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளாா்.

நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும் உறவினா்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சாா்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.

இந்த சூழலில், ரூ.120 கோடி நிலுவை தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க