செய்திகள் :

வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

post image

இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை.

ஏன்... என்ன காரணம்?

இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஒன்று, இந்த ஆண்டு ஐ.டி.ஆர் ஃபார்ம்கள் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டன. மேலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதியும் மிக தாமதமாகத்தான் இருந்தது.

இன்னொன்று, வழக்கத்தைவிட, இந்த ஆண்டு மிக கவனமாக அனைத்தும் செக் செய்யப்படுகிறதாம். போலி வருமான வரிக் கணக்குத் தாக்கல், தவறான வருமான வரிக் கணக்குத் தாக்கலைத் தடுக்க இந்த நடவடிக்கை.

income tax
வருமான வரி

உங்களுக்கும் இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா?

இது பெரும்பாலும் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ஏதாவது தவறு செய்திருந்தாலோ, 'மிஸ்' செய்திருந்தாலோ நடக்கலாம்.

உங்கள் பான் அல்லது வங்கி தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள்.

அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே செய்யுங்கள்.

தேவைப்பட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை மீண்டும் சரியாகச் செய்யுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிப்பது நல்லது.

எந்தப் பிரச்னையும் இல்லை... இமெயில், எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை என்றால், உடனே அந்த வலைதளத்திலேயே புகாரளியுங்கள். 1800 - 103 - 0025 அல்லது 1800 - 419 - 0025 உதவி எண்களிலும் புகாரளிக்கலாம்.

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ... மேலும் பார்க்க

``உங்கள் கனவை சொல்லுங்கள்' என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்... மேலும் பார்க்க