செய்திகள் :

வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

post image

இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை.

ஏன்... என்ன காரணம்?

இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஒன்று, இந்த ஆண்டு ஐ.டி.ஆர் ஃபார்ம்கள் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டன. மேலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதியும் மிக தாமதமாகத்தான் இருந்தது.

இன்னொன்று, வழக்கத்தைவிட, இந்த ஆண்டு மிக கவனமாக அனைத்தும் செக் செய்யப்படுகிறதாம். போலி வருமான வரிக் கணக்குத் தாக்கல், தவறான வருமான வரிக் கணக்குத் தாக்கலைத் தடுக்க இந்த நடவடிக்கை.

income tax
வருமான வரி

உங்களுக்கும் இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா?

இது பெரும்பாலும் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ஏதாவது தவறு செய்திருந்தாலோ, 'மிஸ்' செய்திருந்தாலோ நடக்கலாம்.

உங்கள் பான் அல்லது வங்கி தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள்.

அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே செய்யுங்கள்.

தேவைப்பட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை மீண்டும் சரியாகச் செய்யுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிப்பது நல்லது.

எந்தப் பிரச்னையும் இல்லை... இமெயில், எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை என்றால், உடனே அந்த வலைதளத்திலேயே புகாரளியுங்கள். 1800 - 103 - 0025 அல்லது 1800 - 419 - 0025 உதவி எண்களிலும் புகாரளிக்கலாம்.

'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இர... மேலும் பார்க்க

மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!

மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட மு... மேலும் பார்க்க

ஏறுமுகத்தில் தொழில்துறை... இறங்குமுகத்தில் விவசாயம்... கவனம் செலுத்துவாரா முதல்வர்?

அனைவருக்கும் பசுமை வணக்கம்.‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவர... மேலும் பார்க்க

விருதுநகர் - அருப்புக்கோட்டை இடையிலான இலவசப் பேருந்துகளில் கூட்ட நெரிசல்; மாணவர்கள், பயணிகள் புகார்

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டம் பல ஏழை, எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், சில பாதைகளில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசல் கா... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணை: 14 ஆண்டுகளுக்குப்பின் நீர்மூழ்கி கருவி மூலம் ஆய்வு! எப்படி நடக்கும் தெரியுமா?

முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் ஆதரமாக உள்ளது.கேரளாவில் அணை அமைந்திருப்பதால், அ... மேலும் பார்க்க