செய்திகள் :

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

post image

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார்.

வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையையும் வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்தது.

அக்னிவேஷ் அகர்வால்
அக்னிவேஷ் அகர்வால்

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால். அவருக்கு வயது 49. அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது, விபத்தில் சிக்கி நியூயார்க்கில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு அக்னிவேஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...

தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். 49 வயதுதான் ஆகிறது. திடீர் மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

பெற்றோருக்கு, தங்கள் சொந்தக் குழந்தையின் மரணத்தால் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மகன் ஒரு தந்தைக்கு முன்பு உலகை விட்டுச் செல்லக் கூடாது. இந்த இழப்பு எங்களை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உடைத்துவிட்டது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மோடி இரங்கல்

மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், "அக்னிவேஷ் அகர்வால் அவர்கள் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. அனில் அகர்வாலின் துயரத்தின் ஆழம் தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் குடும்பம் இந்த கடினமான நேரத்தில் தொடர்ந்து வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்

அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால். 1976 ஜூன் 3ஆம் தேதி பாட்னாவில் பிறந்த இவர், அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற மயோ கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார்.

மேற்படிப்பிற்காக பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்காவில் தனது கல்வியை முடித்த பின், தந்தையின் நிறுவனத்தில் உடனடியாக இணையாமல் உலகளாவிய வணிக முறை, நிதி மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் நிர்வாகம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணிபுரிந்து தொழில்முறை அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்
அக்னிவேஷ் அகர்வால்

இந்த அனுபவமே பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய அக்னிவேஷ் அகர்வாலுக்கு வேதாந்தா குழும நிறுவனங்களில் பணியாற்ற பெரிதும் உதவி இருக்கிறது.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க