செய்திகள் :

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

post image

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார்.

வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையையும் வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்தது.

அக்னிவேஷ் அகர்வால்
அக்னிவேஷ் அகர்வால்

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால். அவருக்கு வயது 49. அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது, விபத்தில் சிக்கி நியூயார்க்கில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு அக்னிவேஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...

தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். 49 வயதுதான் ஆகிறது. திடீர் மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

பெற்றோருக்கு, தங்கள் சொந்தக் குழந்தையின் மரணத்தால் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மகன் ஒரு தந்தைக்கு முன்பு உலகை விட்டுச் செல்லக் கூடாது. இந்த இழப்பு எங்களை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உடைத்துவிட்டது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மோடி இரங்கல்

மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், "அக்னிவேஷ் அகர்வால் அவர்கள் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. அனில் அகர்வாலின் துயரத்தின் ஆழம் தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் குடும்பம் இந்த கடினமான நேரத்தில் தொடர்ந்து வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்

அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால். 1976 ஜூன் 3ஆம் தேதி பாட்னாவில் பிறந்த இவர், அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற மயோ கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார்.

மேற்படிப்பிற்காக பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்காவில் தனது கல்வியை முடித்த பின், தந்தையின் நிறுவனத்தில் உடனடியாக இணையாமல் உலகளாவிய வணிக முறை, நிதி மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் நிர்வாகம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணிபுரிந்து தொழில்முறை அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்
அக்னிவேஷ் அகர்வால்

இந்த அனுபவமே பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய அக்னிவேஷ் அகர்வாலுக்கு வேதாந்தா குழும நிறுவனங்களில் பணியாற்ற பெரிதும் உதவி இருக்கிறது.

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்ப... மேலும் பார்க்க

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் எ... மேலும் பார்க்க

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க