செய்திகள் :

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

post image

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் சில இங்கே..

Sanitary Workers Protest
Sanitary Workers Protest

உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ 50 ரூபாய். அக்டோபர் 1 முதல் வழங்கப்படும்.

பெண்களுக்கான கழிப்பறை ஓய்வறை செப்டம்பர் 30 க்குள் கட்டித் தரப்படும்.

கடந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட, குற்றவியல் வழக்குகள் திரும்ப பெறப்படும்.

மண்டலம் 4, 7, 8 ல் 160 புதிய வாகனங்கள் (BOV) வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலையும் இறப்பு கால இழப்பீடும் வழங்கப்படும்.

மழை காலத்திற்கு முன்பாகவே ரெயின் கோட் வழங்கப்படும். இரண்டு ஆண்டுக்கு 1 ரெயின் கோட் என்ற நடைமுறைக்கு பதில் வருட வருடத்திற்கு 1 ரெயின் கோட் என வழங்கப்படும்.

தினமும் இரண்டு மாஸ்க் வழங்கப்படும். கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கூடுதலாக தரப்படும்.

தூய்மை பணியாளர்கள் நலன் காக்க, தூய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அலுவலகம் சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்படும். அதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். அதில் அனைத்து தொழிலாளர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் மட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Sanitary Workers
Sanitary Workers

4 மாதத்திற்கு ஒருமுறை ஆணையர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு சங்க அலுவலகம் தரப்படும்.

பணி நிரந்தரம், வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த நாள் கூலி ரூ 832 ஆகியவை குறித்து அக்டோபர் 3 அன்று நடைபெறும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு காணப்படும்.

விரைவில் தமிழ்நாடு முதல்வருடன் உழைப்போர் உரிமை இயக்க தூய்மை பணியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 3 ஆம் தேதி நடக்குமென்றும் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்க... மேலும் பார்க்க