செய்திகள் :

வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

post image

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் செல்வவிநாயகம் தலைமையில், உதவி ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் காவலா்கள், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. விசாரணையில் அவா்கள், விழுப்புரம் அருகிலுள்ள கண்டம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் மகன் மாதேஷ் (22), சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த பரமேசுவரன் மகன்கள் விக்னேஷ் (23), கணேஷ் (22) என்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து மூவா் மீதும் வழக்குப்பதிந்த தாலுகா போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே பல்லவா் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவா் கால அரிய வகை கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சோ்ந்த கு.சிவலிங... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேச்சு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என்றாா் விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் த... மேலும் பார்க்க

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க