செய்திகள் :

'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

post image

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி ஐந்தாவது நாளாக நடந்து வருகிறது.

EVM Verification
EVM Verification

"EVM இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் நீதிமன்றதை நாடுவோம்." என திமுகவின் என்.ஆர். இளங்கோவன் நேற்று பேசியிருந்தார். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் திமுகவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் சமீரன் இது குறித்து பேசுகையில், 'வாக்குச்சாவடி எண் 75 இல் பதிவான வாக்குகளை சரிபார்த்து, மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. குறைந்தபட்சமாக 500 முதல் 1400 வாக்குகள் வரைக்கும் பதிவு செய்து அவை முறையாக பதிவாகிறதா என்பது உறுதிசெய்யப்படும். வாக்குச்சாவடி எண் 75 இன் அந்த EVM மெஷினில் 412 வது வாக்கை பதிவு செய்யும் வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

EVM Verification
EVM Verification

அதற்கு மேல் வாக்கை பதிவு செய்கையில் விவிபாட் இயந்திரத்தில் லைட் எரியாமல் போய்விட்டது. இது இயல்பான தொழில்நுட்ப கோளாறுதான். வாக்குப்பதிவின் போதுமே சில விவிபாட் இயந்திரங்களில் இப்படி நடந்திருக்கிறது. அப்போது வேறு விவிபாட் இயந்திரத்தை வைத்து வாக்குப்பதிவை முடிப்போம். இங்கேயும் அப்படி செய்ய வழிமுறை இருந்தது. அந்த விவிபாட் இயந்திரத்தை மட்டும் மாற்றி மாதிரி வாக்குப்பதிவை தொடந்திருக்கலாம்.

இல்லையேல், ஒட்டுமொத்தமாக EVM மெஶினோடு அந்த செட்டையே மாற்றிவிட்டு, குலுக்கல் முறையில் வேறு 10 EVM செட்களை எடுத்து அதிலிருந்து ஒரு செட்டில் பரிசோதனையை தொடர்ந்திருக்கலாம். இவ்விரண்டும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்தான். ஆனால், திமுகவினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதேமாதிரி, இன்னொரு EVM மெஷினில் வெளியே மார்க்கரில் எழுதப்பட்டிருந்த சீரியல் நம்பர் முறையாக இல்லை. அதற்கும் ஆட்சேபனம் தெரிவித்தார்கள்.

EVM Verification
EVM Verification

மெஷினை திறந்து

நம்மால் சீரியல் நம்பரை உறுதிப்படுத்திவிட முடியும். அதற்கும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை' எனக் கூறியிருக்கிறார்.

திமுகவினர் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் மற்ற கட்சியினர் ஏஜெண்டுகளோடு அத்தனை நடைமுறைகளும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க

"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" - நிர்மல் குமார்

காவிரி விவகாரம் மீண்டும் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்னையாக முற்றி வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மீண்டும் முயற்சிகளைச் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதற்கு தமிழ்நாடு கண்டனங்களைத் தெரிவ... மேலும் பார்க்க

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும். அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்க... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மோடியின் மன்னிப்பு அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந... மேலும் பார்க்க

"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போர... மேலும் பார்க்க

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம... மேலும் பார்க்க