செய்திகள் :

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம். அதனால், தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த கட்சிகளில் விசிகவும் ஒன்று.

ஆதரவு கொடுத்த விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது தவெக.

ஆனால், அமைச்சரவையில் இடம்பெற்றதில் விசிகவிற்குள்ளேயே சிலருக்கு உடன்பாடு இல்லை.

இதனால், விசிகவில் இருக்கும் சிலர் திமுகவில் இணையலாம் என்கிற பேச்சு அடிக்கடி அடிபட்டு வந்தது.

ஸ்டாலின், திருமாவளவன்
ஸ்டாலின், திருமாவளவன்

இந்தப் பேச்சுகளை உண்மையாக்கும் விதமாக, முதல் விக்கெட்டாக திமுகவில் இன்று இணைந்துள்ளார் விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு.

இவர் 2021-ம் ஆண்டு செய்யூர் தொகுதி எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவருக்குப் பின், ஆளூர் ஷாநவாஸ், சிந்தனைச் செல்வன் ஆகியோர் வரிசையாக திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

முதலில், பேச்சுகள் அடிப்படும் போதே, விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால், அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கும் இந்த நேரத்தில், திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்தால் குழப்பம் ஏற்படும் என்று முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது தவெக.

ஒருவேளை, அந்தப் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், விசிகவில் இருந்து திமுகவில் பலர் இணையாமல் தடுக்கப்பட்டிருக்கலாம்.

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது..."எப்போதும் அம்பேத்கர்... மேலும் பார்க்க

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெ... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்த... மேலும் பார்க்க

`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' - எடப்பாடி சூளுரை

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி‌.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று பங்கேற்றிருந்தார். கட்சி... மேலும் பார்க்க