செய்திகள் :

'விஜய் தான் களத்தில் இல்லை' - தமிழிசை செளந்தரராஜன் கடும் தாக்கு

post image

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம்,

"திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடி பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். இதற்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

திருப்பரங்குன்றம் மதம் பிரச்னை அல்ல. இது ஈகோவால் எழுந்துள்ள பிரச்னை. இதில் நீதிபதியை குற்றம் சாட்டுவது மிகவும் தவறான போக்கு. முருக பகவான் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் கூறுகிறார்கள். அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண் அரசியல்வாதியான நான் பேச முடியாது. எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழிசை செளந்தரராஜன்

மஞ்சளுக்காக தனி வாரியத்தை அமைத்தது பாஜக தான். எனவே மஞ்சள் நகரத்து மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன் 10 வயதில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார். எனில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு எந்தளவு மக்கள் தொடர்பு இருக்கும் என்பதை அவர் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் தான் களத்தில் இல்லை. திடீர், திடீரென வருகிறார். திடீர், திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் அவரைப் பற்றிதான் சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன்.

பாஜக நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. நநேந்திர மோடி சிறந்த பிரதமராக உள்ளார். அதனால் விஜய் சொல்வது பாஜகவுக்கு பொருந்தாது. திமுக ஆட்சியில் மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. காந்திக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்றார்.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க