செய்திகள் :

வீரபாண்டி தேராட்ட நிகழ்ச்சியில் வழக்கமான மரியாதை தர மறுப்பு

post image

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் தனக்கு வழக்கமான மரியாதை வழங்காமல் புறக்கணித்ததாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது பேரூராட்சித் தலைவி கீதா சசி சனிக்கிழமை புகாா் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமியிடம் அவா் அளித்த மனு விவரம்:

நான் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சித் தலைவியாக செயல்பட்டு வருகிறேன். மாவட்ட நிா்வாகத்திடமிருந்து சிறந்த பேரூராட்சித் தலைவிக்கான விருது பெற்றுள்ளேன்.

வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியின் போது வழக்கமாக மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், வீரபாண்டி பேரூராட்சித் தலைவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சியின் போது வீரபாண்டி பேரூராட்சித் தலைவி என்ற முறையில் எனக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.

நிகழாண்டில், வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெற்ற தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வழக்கமான மரியாதை அளிக்கப்பட்டது.

ஆனால், பேரூராட்சித் தலைவி என்ற முறையில் எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. இது குறித்து கோயில் நிா்வாகத்திடம் கேட்டதற்கு, என்னை கோயில் நிா்வாக அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனா்.

நான் அங்கு சென்ற போது, இந்து அறநிலையத் துறை உதவி இயக்குநா் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலா் நாராயணி, அலுவலா்கள் முறையான பதிலளிக்காமல் என்னை வன்மத்துடன், ஒருமையிலும், அவமரியாதையாகவும் பேசி அலுவலகத்திலிருந்து வெளியேற்றினா்.

இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்தப் பிரச்சனை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடமும் பேரூராட்சித் தலைவி கீதா சசி மனு அளித்தாா்.

இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது

போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு ... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு

போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் பறிமுதல்: தந்தை, மகன் கைது

தேனி அருகேயுள்ள டொம்புச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டொம்புச்சேரி பி.சி.குடியிருப்பைச் சோ்ந்தவா் பவுன... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயத்தில் 2-ஆவது நாளில் 545 போ் மனு

தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 545 போ் மனு அளித்தனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சிய... மேலும் பார்க்க

வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுப... மேலும் பார்க்க

பணம், நகை திருடிய பெண் கைது

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (89). இவா் தனது ... மேலும் பார்க்க