செய்திகள் :

``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

post image

சமீபத்திய போராட்டத்தின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, ``சட்டம்-ஒழுங்கு, மாணவர் நலன் மற்றும் காவல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதாக என் கட்சிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒருவேளை உண்மையாக இருந்தால், அது மத்திய உள்துறை அமைச்சரின் தோல்வியையே காட்டுகிறது.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றால், அது அவருடைய தோல்விதான். உங்கள் கண்காணிப்பில் ஒரு கட்சி வெளிநாட்டிலிருந்து நடத்தப்படுகிறது என்றால், நீங்கள் எத்தகைய 'சாணக்கியர்?' உங்களுக்கு அந்தப் பதவி எப்படிச் சரியானதாக இருக்கும்? அப்படியானால் நீங்கள் பதவி விலக வேண்டும்.

தர்மேந்திர பிரதான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மற்றொரு நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அரசிடம் என்ன மாற்றுத் திட்டம் உள்ளது? போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கேலி செய்யும் முயற்சிகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன். விவசாயத் தலைவர்கள் அளித்த ஆதரவையும் ஏற்றுக்கொண்டேன். பா.ஜ.க-வில் இணைய வேண்டும் என எனக்கு அழைப்பு வந்தது. அது ஒருகட்டத்தில் மிரட்டல்களாக மாறின.

ஆனால், வாய்ப்பு கிடைத்தாலும் நான் பா.ஜ.க-வில் இணையமாட்டேன். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எனது தலைமுறை மக்களை அச்சுறுத்துகின்றனர்.

அமித் ஷா
அமித் ஷா

வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் கவலைகள் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயல்கிறது.

டெல்லி காவலர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும் அல்லது தங்கள் காக்கி நிற நீண்ட கால்சட்டையைக் கழற்றிவிட்டு, காக்கி நிற அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு பா.ஜ.க தலைமையகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பலாம்.

போராட்டத்திற்கு முன்னதாகவே கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டதை நான் பார்த்தேன். ஆனால், மாணவர்கள் மீது பழிபோட காவல்துறை திட்டமிட்டிருந்தது. இப்படித்தான் இந்த முழு நடவடிக்கையும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை." என்றார்.

சொந்த வீடுகளுக்கு செல்ல மாஞ்சோலை மக்களுக்கு அனுமதி மறுப்பு; நெருக்கும் வனத்துறை; வெடித்த வாக்குவாதம்

தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறுவதற்கு பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத்துக்கு உட்... மேலும் பார்க்க

"இனி காசாவில் 'நோ' ஆயுதம்; புதிய அரசின் கரங்களில் பாலஸ்தீனம்" - ட்ரம்ப் நன்றி

ஈரான் போர் தீவிரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே 'நான் முடித்து வைத்துவிட்டேன்' என்று கூறிய இஸ்ரேல் - காசா போர் ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கடந்த அக்டோ... மேலும் பார்க்க

"கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்?" - அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி அறிக்... மேலும் பார்க்க

ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள்!மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' - ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

"3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்! - எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக?

செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு திமுக ஆட்சிக் காலத்தில், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைம... மேலும் பார்க்க