செய்திகள் :

மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' - ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

post image

"3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தவெக அரசைக் குற்றம்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்நிலையில் செய்தியாளரைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தவறாக வந்த தகவலின் அடிப்படையில், மக்களைக் குழப்பும் விதமாக ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் சொல்லும் கணக்கீடுகள் தவறானவை. சமூக வலைத்தளத்தில் அதிகமாக கரண்ட் பில் வந்துள்ளதாகத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கமான ஆய்வுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த வருடம் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்கு மேல் பில் வந்து இருக்கிறது. இந்த வருடம் 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குத்தான் அதிகமாக வந்து இருக்கிறது.

2 லட்சம் பேருக்குக் கடந்த ஆண்டைவிட குறைவாகத்தான் 3 மடங்கு மேல் வந்து இருக்கிறது. மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது தவறு" என்று கூறியிருக்கிறார்.

சிடிஆர் நிர்மல் குமார்
சிடிஆர் நிர்மல் குமார்

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, "காவிரி பிரச்னையில் முதல்வர் விஜய் விரைவில் முடிவு எடுப்பார். மேகதாது விவகாரத்தில் அரசு தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையை ஆய்வு செய்து விரைவில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிடுவார்" என்று கூறியிருக்கிறார்.

``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

சமீபத்திய போராட்டத்தின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர்... மேலும் பார்க்க

ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள்!மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்! - எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக?

செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு திமுக ஆட்சிக் காலத்தில், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைம... மேலும் பார்க்க

தவெக: ``முதலில் மின்வெட்டுப் பிரச்னை; இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை" - ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன. பில்லிங் செயல்பாட்டில... மேலும் பார்க்க

"கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என அவர்களுக்குப் பொறுக்கவில்லை"- யாரைச் சொல்கிறார் வைகோ?

சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, ``பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண... மேலும் பார்க்க

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' - மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்...கவுன்சிலருக்கு ஒரு ... மேலும் பார்க்க