செய்திகள் :

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

post image

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், டெலிகிராம் செயலியில் இணையுமாறும் கூறப்பட்டுள்ளது. டெலிகிராமில் அவரைத் தொடர்புகொண்ட மோசடி கும்பல், கூகுள் மேப்பில் ஹோட்டல்களுக்கு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ கொடுப்பதுதான் வேலை எனக்கூறியுள்ளார். முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ரூ.10, ரூ.20, ரூ.40 என சிறிய தொகையை அபிநயாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

பின்னர், ”ப்ரீபெய்ட் டாஸ்க்” எனக்கூறிக் கொண்டு, பார்ட் டைம் வேலைகளை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காட்டியுள்ளனர். இதை நம்பிய அபிநயா, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக பணம் அனுப்பியுள்ளனர். ஒரு கட்டத்தில், தான் கட்டிய பணத்தை அவர் எடுக்க முயன்றபோது ”உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிட்டது”, ”தவறான ஆப்ஷனை க்ளிக் செய்துள்ளீர்கள்”, ”அக்கவுண்ட் ஃப்ரிஷ் ஆகிவிட்டது” என பல காரணங்களைக் கூறி மீண்டும் மீண்டும் பணக் கட்டச் சொல்லியுள்ளனர்.

இவ்வாறு அபிநயா மொத்தம், ரூ.9,45,300 வரை பணம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதே போல, நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகிலுள்ள இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த சகாய அஸ்வினி, என்பவரிடமும் மோசடி நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில் வெளிநாட்டு துணி நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இணைப்பில் சென்றபோது படங்களைப் பார்த்து ரிவ்யூ செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறியுள்ளனர். இதிலும் முதலில் ரூ.14,000 லாபம் போல் கொடுத்து நம்ப வைத்துள்ளனர்.

சைபர் கிரைம்

பின்னர், அடுத்தடுத்தகட்ட வேலைகளைப் பெற பணம் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதை நம்பிய சகாய அஸ்வினி, தனது நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய பிறகு ’தொகை போதவில்லை’, ‘ஆர்டர் போதவில்லை’ எனக்கூறி மொத்தம் ரூ.9,50,192 வரை பணம் பறித்துள்ளனர். கடைசியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க