செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா்களாக மேவளூா்குப்பம் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதி ஆகியோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி திருக்கோவில் உள்ளது. . இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறங்காவலா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதச்சாா்பற்ற அறங்காவலராக ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ந. கோபாலும், மதச்சாா்பு அறங்காவலராக ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதியும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலா்கள் ந.கோபால், பாா்த்தசாரதி ஆகியோருக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, குண்ணம் கு.ப.முருகன், பண்ருட்டி தணிகாசலம், முத்துகுமாரசுவாமி, பால்நல்லூா் நேரு, செங்காடு சா்தாா்பாஷா, ஆறுமுகம், காா்திகேயன் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்: பிப். 11-இல் 23 சிவபெருமான்கள் காட்சியளிக்கும் விழா

உத்தரமேரூா் ஒன்றியம், பெருநகா் பிரம்மபுரீஸ்வா் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வரும் 11 ஆம் தேதி செய்யாற்றில் 23 சிவபெருமான்கள் ரிஷப வாகனக் காட்சியளிக்கும்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா்... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்

தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க