செய்திகள் :

ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

post image

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் - இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே - லெபனான் உள்ளிட்ட எந்த முனைகளிலும் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பது தான்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லாத இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

முன்பு, போர் பாதிப்புகளை ஈடு செய்யும் என்று ஈரான் கூறி வந்தது.

அதற்குப் பதிலாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு...

"போர் நிறுத்தக் காலமான 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீர்ச்சந்தியில் எவ்வித சுங்கக் கட்டணமும் இருக்காது. இந்த 60 நாட்கள் முடிந்த பிறகும் கூட கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் முழுமையடையாமல் போனால், கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலச் செலவுகளை ஈடுகட்டும் விதமாக... மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு 'காவல் தூதனாக' (Guardian Angel) செய்த சேவைகளுக்காக, அமெரிக்காவால் மட்டுமே சுங்கக் கட்டணங்கள் விதிக்கப்படலாம்".

ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டாலும், ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்காக ஈரானில் இருந்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச்சிற்கு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

இன்று 12-வது சர்வதேச யோக தினம். இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்...> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆ... மேலும் பார்க்க

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயா... மேலும் பார்க்க

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான்... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, ... மேலும் பார்க்க

‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் பார்ப்பது தொடர்பாக வந்திருக்கிற... மேலும் பார்க்க

’நான் தன்னந்தனி ஆளு’ - மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பே... மேலும் பார்க்க