செய்திகள் :

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

post image

இன்று 12-வது சர்வதேச யோக தினம்.

இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்...

> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆற்றலாலும் விழிப்புணர்வாலும் நிறைந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தேசமும், உலகமும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இதுதான் யோகாவின் பலம்.

> யோகா தினத்தில் வங்காள மண்ணில் இருப்பது மிகவும் சிறப்பானது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் அவதரித்த புனித பூமி இது. இங்கிருந்துதான் சுவாமி விவேகானந்தர் யோகாவை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

மோடி
மோடி

மேலும் மகரிஷி அரவிந்தர் போன்ற சிறந்த யோகிகள் பிறந்த இடமும் இதுவே. லஹிரி மகாசயர் போன்ற மாபெரும் யோகிகள் யோகா பாரம்பரியத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற மண் இது.

இன்று, இந்த மண்ணில் கூட்டு யோகா பயிற்சி செய்வது ஒரு தனித்துவமான ஆன்மீக உணர்வைத் தருகிறது.

> இந்த வங்காள மண்ணில் பிறந்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், ஒரு மனிதனின் அடையாளம் தனித்திருப்பதில் இல்லை... தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் இணைந்திருப்பதில் தான் உள்ளது என்று நம்பினார்; இந்த இணைப்பே யோகாவின் முக்கிய சாராம்சமாகும்.

> யோகா என்பது வெறும் உடற்பயிற்சிக்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல. அது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கட்டுப்பட்டதும் அல்ல. இந்தியாவில், யோகாவை மனித வாழ்க்கையின் ஒளியாக, அதாவது விழிப்புணர்வை ஆற்றலுடன் இணைக்கும் ஒன்றாகவே நாம் எப்போதும் பார்த்து வருகிறோம்.

> நண்பர்களே, ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்று நாம் கூறும்போது, வயது என்பது மனிதனின் திறமையைக் குறைத்துவிடக் கூடாது என்பதாகும். மனித வாழ்க்கை தொடர்ந்து வளர யோகா உதவும். நம் இலக்கு என்னவென்றால்:

மோடி
மோடி

* 20 வயதில் இருந்ததை விட 40 வயதில் நாம் அதிக வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

* 30 வயதில் இருந்ததை விட 50 வயதில் அதிக ஆற்றலுடன் இருக்க வேண்டும்.

* 50 வயதில் இருந்ததை விட 70 வயதில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இங்குதான் யோகா நமக்கு உதவுகிறது.

> கீதையில், யோகா குறித்து பகவான் கிருஷ்ணர் இவ்வாறு கூறியுள்ளார்:

"யுக்தாஹார-விஹாரஸ்ய, யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு, யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய, யோகோ பவதி துக்க-ஹா".

இதன் பொருள், சமச்சீரான உணவு மற்றும் பொழுதுபோக்கு, சமநிலையான செயல்கள் மற்றும் முயற்சிகள், சீரான தூக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் யோகா என்பது துயரங்களை அழிப்பதாக மாறுகிறது என்பதாகும். இந்தச் சமநிலைதான் யோகாவின் அடித்தளம், இதுதான் நம் வாழ்க்கையின் அடித்தளமும் கூட.

இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட யோகா நிகழ்வு வீடியோ:

சென்னையில் நடந்த யோகா நிகழ்வு வீடியோ:

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் கலந்துகொண்ட யோகா நிகழ்வு வீடியோ:

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயா... மேலும் பார்க்க

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான்... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் - இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே. புர... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, ... மேலும் பார்க்க

‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் பார்ப்பது தொடர்பாக வந்திருக்கிற... மேலும் பார்க்க

’நான் தன்னந்தனி ஆளு’ - மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பே... மேலும் பார்க்க