செய்திகள் :

10-வது ஆண்டில் TNPL: புதிய சீசன், புதிய எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடக்கம்!

post image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் இந்த சீசன், பத்தாவது ஆண்டைக் குறிப்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது.

இன்றைய தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியன் 'ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்' அணியும், முன்னாள் சாம்பியன் 'திண்டுக்கல் டிராகன்ஸ்' அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியின் மறுபதிப்பாக அமைந்துள்ள இந்தப் போட்டி, திண்டுக்கல் சொந்த மண்ணில் நடப்பதால் கூடுதல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 2025 இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ், இந்த முறையும் தனது ஆதிக்கத்தைத் தொடரக் காத்துள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு தோல்விக்கு சொந்த மைதானத்திலேயே பதிலடி கொடுக்க திண்டுக்கல் அணி தீவிர முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்த சீசனின் ஸ்பெஷல் என்னென்ன?

• DRS அறிமுகம்: கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடுவர் மறுஆய்வு முறை (DRS) இந்த ஆண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

• அதிகபட்ச ஏலம்: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், 783 வீரர்களிலிருந்து 55 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஷ்வந்த் வல்தாப்பாவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ₹14.45 லட்சத்திற்கு வாங்கியது, இந்த ஆண்டின் உச்சபட்ச ஏலமாகும்.

• களத்தில் இல்லாத நட்சத்திரங்கள்: வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதன் காரணமாக, நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இந்த சீசனில் விளையாடவில்லை.

கவனம் பெறும் அணிகளும் நட்சத்திர வீரர்களும்!

நடப்பு சாம்பியன் திருப்பூர் அணியில் சாய் கிஷோர், துஷார் ரஹேஜா, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் ஆகியோர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள். திண்டுக்கல் அணியில் பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களைத் தாண்டி, வழக்கம்போல 'சேப்பாக் சூப்பர் கில்லீஸ்', 'கோவை கிங்ஸ்', 'நெல்லை ராயல் கிங்ஸ்' உள்ளிட்ட அணிகளும் கோப்பைக்கான வலுவான ரேஸில் உள்ளன.

போட்டி அட்டவணை

• ஆகஸ்ட் 4 முதல் 15 வரை: திண்டுக்கல் மைதானத்தில் 20 லீக் போட்டிகள்.

• ஆகஸ்ட் 18 முதல் 22 வரை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எஞ்சிய லீக் போட்டிகள்.

• ஆகஸ்ட் 23 முதல் 28 வரை: பிளே-ஆஃப் சுற்றுகள் மற்றும் கோப்பையை வெல்லும் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறவிருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் எத்தனையோ இளம் கிரிக்கெட் திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெருமை TNPL-ஐச் சாரும். இந்த சீசனிலும் பல புதிய முகங்கள் தங்களை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர்.

Auqib Nabi: காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான முதல் வீரர் - யார் இந்த ஆகிப் நபி?

சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குச் செல்ல முடியுமா? இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் மையங்களுக்கு வெளியே வளரும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போலவே இந்தக் கேள்வியை பலமுறை எதிர்கொண்டவர் ஆகிப் நப... மேலும் பார்க்க

"டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்" - ரஹானே குறித்து விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திரு... மேலும் பார்க்க

Rahane: '278... Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!

"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்தி... மேலும் பார்க்க

Ajinkya Rahane: "கேப் எண் 278 விடைபெறுகிறது!"- ஓய்வை அறிவித்த ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ரஹானே இ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க