செய்திகள் :

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

post image

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest
cjp protest

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என் தந்தை ஒரு பேராசிரியர். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்தார். அவர் தொடக்கத்திலேயே எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு பாடம் `தோல்வியடைவது பரவாயில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.'

சமூகத்தில் உள்ள பெரியவர்கள் என்ற முறையில், ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதிக்கு முக்கியத்துவம் தராமல் குறுக்கு வழிகளையே நாடும்.

இன்று, மாணவர்கள் தங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்று ஏமாற்றமடையும் போது, அதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இனி ஒருபோதும் இதுபோன்று உணராதிருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

இளைய இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிரம்பியுள்ளது. அவர்களே நமது வெற்றிக்கு எரிபொருள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் உட்பட சமூகமாக உள்ள நாம் அனைவரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் மிகப்பெரிய பொறுப்பையும் வெவ்வேறு பங்கையும் கொண்டுள்ளோம்.

கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும், மற்றும் தகுதி வெற்றி பெறும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் நிச்சயமாகக் கண்டறிவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜெய் ஹிந்த்! " எனப் பதிவிட்டிருக்கிறார்.

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச... மேலும் பார்க்க

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க

CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 200... மேலும் பார்க்க

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' - தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்த... மேலும் பார்க்க

போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான். அரிய வகை நோயால்... மேலும் பார்க்க