செய்திகள் :

+2 மாணவர்களே! - CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - முழு விவரம்!

post image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (26.02.2026) கடைசி நாளாகும்.

நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு

புதியக் கல்விக்கொள்கைப்படி உருவாக்கப்பட்ட CUET UG தேர்வு மூலமாகவே அனைத்து கல்வி நிறுவனங்களின் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேரமுடியும். தவிர திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர முடியும்.

டிசைன் & ஃபேஷன் தொழில்நுட்பம் சார்ந்த பல படிப்புகளை வழங்கும் Footwear Design and Development Institute (FDDI), இந்தியா முழுவதுள்ள பல வேளாண் கல்லூரிகள் மூலம் வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய அறிவியல் பாடங்களை வழங்கும் Indian Council of Agricultural Research (ICAR), குற்றவியல் அறிவியல் (Forensic Science) சார்ந்த சிறப்புப் படிப்புகளை வழங்கும் National Forensic Sciences University (NFSU), உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளை வழங்கும் National Institute of Food Technology Entrepreneurship and Management, Kundli, Indian Institute of Tourism & Travel Management உள்ளிட்ட பல நிறுவனங்கள் CUET UG தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. 2026-27 இளநிலை படிப்புகளுக்கான CUET UG நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ம் தேதி தொடங்கி பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. இந்தத் தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்தச் சூழலில் இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு

இதையடுத்து, CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது தேசிய தேர்வுகள் முகமை. +2 பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் இந்தத் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் எழுதலாம். https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது கேட்கப்பட்டுள்ள தகவல்களை மிகவும் கவனமாக உள்ளிட வேண்டும். இது இறுதி வாய்ப்பு என்பதால் திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம். அல்லது https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

ISRO : 9ம் வகுப்பு மாணவர்களே... இஸ்ரோ உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது! - முழு விவரம்

உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் அளவுக்கு ISRO (Indian Space Research Organisation) விண்ணில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. பல நாடுகள் முயன்றும் இயலாமல் போன நிலவுப் பயணத்தையும் ISRO சாத்தியப்படுத... மேலும் பார்க்க

UPSC / TNPSC: 'மாணவர்கள் இந்த மூன்று விஷயங்களை முதலில் செய்ய வேண்டும்.!'- பயிற்சியாளர் ஆதில் பெய்க்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' - இது சரியா?

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 23,806 சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளன. 18 லட்சத்து 49,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதிக்கொண்டிருக்க... மேலும் பார்க்க

UPSC / TNPSC: சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

"மகளிருக்கு ரூ.6,500 கோடியை ஒதுக்கிய முதல்வரால், எங்களுக்கு செய்ய முடியாதா?" - பகுதிநேர ஆசிரியர்கள்

தமிழகத்திலுள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், தேர்தல் வரவுள்ள நிலையில் சமீபகாலமாக தங்கள் போ... மேலும் பார்க்க