செய்திகள் :

45 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கை 'சூப்பர்' ஆக இருக்க தங்கமான 4 விதிகள்!

post image

"இன்னும் 10 - 15 வருஷத்துல ஓய்வு பெற போறோம்... சேமிப்பு போதுமானதா இருக்குமா? பிள்ளைகளோட எதிர்காலம் என்ன ஆகும்?" — 50 வயதை நெருங்கும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஓடும் அமைதியான புயல் இது.

நிதி ஆலோசகர் சுஸே ஆர்மன் எழுதிய "The Ultimate Retirement Guide for 50+" புத்தகத்தின் சாராம்சத்தை, நமது இந்திய குடும்பச் சூழலுக்கு ஏற்ப இங்கே பார்க்கலாம்.

1. 'நோ' சொல்லப் பழகுங்கள் — பிள்ளைகளின் எதிர்காலம் உங்களுக்கா?

இந்திய பெற்றோர்களின் மிகப்பெரிய பலவீனமே பிள்ளைகளுக்காகத் தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவழிப்பதுதான். சுஸே ஆர்மன் தரும் முதல் எச்சரிக்கை: "உங்கள் ஓய்வுக்கால நிதிக்கு யாரும் கடன் தரமாட்டார்கள்." பிள்ளைகளின் ஆடம்பரத் திருமணத்திற்கோ அல்லது மேல்நாட்டுக் கல்விக்கோ உங்கள் ஓய்வுக்காலச் சேமிப்பைக் கரைக்காதீர்கள். அவர்கள் கல்விக்கடன் பெறட்டும்; நீங்கள் உங்கள் நிதிச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்

2. ஆரோக்கியமே உண்மையான முதலீடு!

50 வயதிற்குப் பிறகு மருத்துவச் செலவுகள் திடீரென உயரக்கூடும். எனவே, உங்கள் பழைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தற்போதைய மருத்துவச் செலவுகளுக்கு ஏற்ப 'டாப்-அப்' (Top-Up) செய்து கொள்ளுங்கள்.

அவசர கால நிதியாக (Emergency Fund) குறைந்தது 8 முதல் 12 மாத காலக் குடும்பச் செலவுக்கான பணத்தை லிக்விட் ஃபண்டுகளில் அல்லது எஃப்டியில் வைத்திருப்பது அவசியம்.

3. கடன்களுக்கு இப்போதே முடிவுகட்டுங்கள்!

ஓய்வுபெறும் நாளன்று உங்கள் தலையில் ஒரு பைசா கடன் கூட இருக்கக்கூடாது. வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு நிலுவைகளை 60 வயதிற்குள் முழுமையாக அடைத்துவிட திட்டமிடுங்கள். கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான நிம்மதியைத் தரும்.

ஓய்வுக்கால முதலீடு
ஓய்வுக்கால முதலீடு

4. பணத்தை சும்மா வைக்காதீர்கள் - பணவீக்கத்தை வெல்லுங்கள்!

50 வயதாகிவிட்டது என்பதற்காகப் பணத்தை முழுமையாக வங்கி சேமிப்புக் கணக்கிலேயே பூட்டி வைக்காதீர்கள். இந்தியாவில் பணவீக்கம் உங்கள் பணத்தின் மதிப்பை மெல்லக் குறைக்கும். உங்கள் முதலீட்டுப் பிரிவில் (Portfolio) ஒரு பகுதியை பாதுகாப்பான கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் (Debt Funds), மிதமான பகுதியை ஈக்விட்டி ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்யுங்கள்.

இப்போதே உங்கள் நிதியைத் திட்டமிடுங்கள். பிறரை நம்பியிராமல், தற்சார்புடன் வாழும் ஓய்வுக்காலமே நீங்கள் உங்களுக்குத் தரும் சிறந்த பரிசாகும்!

45+ வயதினருக்கான சிறப்பு ரிட்டைர்மென்ட் பிளானிங் நிகழ்ச்சி

தலைப்பு: லம்சம் முதலீடு மூலம் நிம்மதியான ஓய்வுக்காலம் - 45+ வயதினருக்கான ரிட்டைர்மென்ட் திட்டமிடல் ஆன்லைன் நிகழ்ச்சி

லம்சம் முதலீடு சாதக பாதகங்கள் | பாதுகாப்பு + வளர்ச்சிக்கான திட்டமிடல் | 3 பக்கெட் ஸ்ட்ராட்டஜி பயன்படுத்தும் முறை பற்றி இந்நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளுங்கள்

நாள்: செப்டம்பர் 06, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11 - 12:30 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: வினோத் குமார், ஃபினான்ஷியல் அட்வைசர் & போர்ட்ஃபோலியோ மேனேஜர்

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-sep06-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_sep06_2026

Gulf வாழ்க்கை நிரந்தரமில்ல! - சொந்த ஊர் திரும்புவதற்குள் ₹1.2 கோடி சேர்ப்பது எப்படி?

வெள்ளிக்கிழமை மதியம் தோஹா அல்லது துபாய் அவென்யூவில் நண்பர்களுடன் டீ சாப்பிடும்போது: “என்ன மாப்ள, ஊர்ல வாங்குன நிலத்துக்கு அடுத்த தவணை கட்டியாச்சா? பிசினஸ் ஆரம்பிக்க அண்ணனுக்கு அனுப்பின பணம் என்ன ஆச்சு... மேலும் பார்க்க

Mutual Fund: ''டைரக்ட் ஃபண்ட் வேண்டாம்; ரெகுலர் ஃபண்டே போதும்'' - உஷாராக முதலீடு செய்யும் பெண்கள்!

இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இத்தனை நாளும் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போட்டுக்கொண்டு இருந்தோம... மேலும் பார்க்க

பணம் உங்களுக்காக வேலை செய்யணுமா? - உங்களைப் பணக்காரர் ஆக்கும் 7 ரகசிய விதிகள்!

மாதச் சம்பளம், சேமிப்பு மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளை மட்டும் சேர்த்து வச்சா சீக்கிரமே பணக்காரர் ஆயிடலாம்னு நினைக்கிறீங்களா? ரொம்ப சாரி. நீங்க உங்களுடைய அடிப்படை ஐடியாக்களை மாற்ற வேண்டிய நேரம் வந்த... மேலும் பார்க்க

Mutual Fund: பெற்றோர்களின் சாய்ஸ் FD & RD... இன்றைய இளைஞர்களின் ஒரே சாய்ஸ் SIP - ஏன் தெரியுமா?

முந்தைய தலைமுறையினர் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்த்து வைக்க மிகச் சிறந்த முதலீட்டுக் கருவியாகப் பார்த்தது வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் வங்கி ரெக்கரிங் டெபாசிட் ஆகிய இரண்டைத்தான். இருப்பதற்... மேலும் பார்க்க

Mutual Fund: புதிய மாற்றம்... 5 ஆண்டுகளுக்கு மேல் SIP முதலீட்டைத் தொடரும் 'சபாஷ்' முதலீட்டாளர்கள்.!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே ரிஸ்க்கானது; உத்தரவாதம் இல்லாதது; அதில் முதலீடு செய்தால், நஷ்டம் நிச்சயம் என்று நினைத்துப் பலரும் அதில் முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ம... மேலும் பார்க்க

₹1 கோடி சேர்க்க 12 ஆண்டுகள்... ஆனால் 2-வது கோடி வெறும் 4 ஆண்டுகளில்! - எப்படி?

நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைய விரும்புகிறீர்களா? "பொதுவாக ஒரு தனி நபரின் சொத்து மதிப்பு ₹1 கோடியைத் தொட்ட பிறகு, அடுத்தடுத்த கோடிகள் வேகமாக வளரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை! சார்லி மங்கர் கூறியத... மேலும் பார்க்க