Mutual Fund: ''டைரக்ட் ஃபண்ட் வேண்டாம்; ரெகுலர் ஃபண்டே போதும்'' - உஷாராக முதலீடு...
Mutual Fund: ''டைரக்ட் ஃபண்ட் வேண்டாம்; ரெகுலர் ஃபண்டே போதும்'' - உஷாராக முதலீடு செய்யும் பெண்கள்!
இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இத்தனை நாளும் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போட்டுக்கொண்டு இருந்தோம்; இனி தங்கத்தைத் தாண்டி, மியூச்சுவல் ஃபண்டிலும் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
தங்கம் வாங்க அதிக பணம் தேவைப்படுகிறது; தங்க நகை டிசைனும் பழசாகிவிடுகிறது. தவிர, அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருக்கிறது என்றெல்லாம் நினைக்கும் பெண்கள் இப்போது தங்கள் முதலீட்டுக் கவனத்தை மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.
பெருவாரியான இந்தியப் பெண்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால், அவர்கள் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களையே அதிகம் தேர்வு செய்து முதலீடு செய்யத் தொடங்கி இருப்பது இன்னொரு ஆரோக்கியமான விஷயம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது இரு வகையில் முதலீடு செய்யலாம். ஒன்று, ரெகுலர். இன்னொன்று, டைரக்ட். இந்த இரண்டு என்ன வித்தியாசம் எனில், ரெகுலர் என்பது டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து போல. டைரக்ட் என்பது நாமே நேரடியாக மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடுவது போல.
டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து வாங்கி சாப்பிட வேண்டும் எனில், அவருக்கான ஃபீஸைத் தந்தாக வேண்டும். அது போல, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் ரெகுலர் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது, டாக்டருக்குத் தரும் ஃபீஸ் போல சுமாராக 0.5% முதல் 1% வரை தரவேண்டி இருக்கும்.
இந்தக் கூடுதலான கட்டணத்தை ஏன் தரவேண்டும் என்று நினைத்துப் பலரும் டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் ஃபண்டுகளை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் வாங்கும்போது எல்லோரும் தங்கள் ரிஸ்க் லெவலுக்கும், எதிர்காலத்துக்கான பணத்தை சேர்க்கும் வகையிலுமான சரியான ஃபண்ட் திட்டத்தைத்தான் தேர்வு செய்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி.
எந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யக்கூடாது என்பது தெரியாமலே பலரும் ஏதோ ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் நிலையே டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களிடம் பார்க்க முடிகிறது.
ஆனால், டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் நாமே முதலீடு செய்யும் அளவுக்கு அந்த முதலீடு பற்றி தெரியாது. எனவே, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரின் உதவியுடன் அவர் வழிகாட்டுதலுடன் முதலீடு செய்வதே சரி என்றுதான் பெண் முதலீட்டாளர்கள் நினைக்கிறார் என்பதையே ஆம்ஃபி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கின்றன.
ஆம்ஃபி - கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள டேட்டாவின்படி, கடந்த மார்ச் 2026 வரையிலான காலத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களின் 77% பேர் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக செய்யும் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களில்தான் முதலீடு செய்கிறார்கள்.
ரூ.5000 முதல் ரூ.10000 வரை முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 62% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும், ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 64% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும், ரூ.500 முதல் ரூ.1000 வரையிலான முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 62% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறார்கள்.

டைரக்ட் ஃபண்டுகளைவிட ரெகுலர் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் பெண்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது கடன் சார்ந்த திட்டங்களைத் தேர்வு செய்வதைவிட, தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களைத் தேர்வு செய்வதைவிட, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்து, 'நீண்ட கால நோக்கில் நாங்களும் ரிஸ்க் எடுக்கத் தயார்' என்பதை நிருபித்திருக்கிறார்கள்.
மாதந்தோறும் ரூ.500 வரை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் பெண்களில் 63% பேர் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் பெண்களில் 88% பேர் பங்குச் சந்தை சார்ந்த பெண்கள் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்கிறார்கள்.

அதே போல, மாதந்தோறும் ரூ500 என மிகக் குறைந்த அளவில் முதலீடு செய்யும் பெண்கள் கடன் சார்ந்த திட்டங்களில் 13% பேரும், பேசிவ் ஃபண்ட் திட்டங்களில் 9% பேரும், ஹைபிரிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் 11% பேரும் முதலீடு செய்கிறார்கள். 10000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களில் டெப்ஃட் ஃபண்டில் 1% பேரும், பேசிவ் ஃபண்டில் 3% பேரும் முதலீடு செய்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டில் அதிகமான பெண்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டீர்களா?

எஸ்.பி.ஐ செய்ய நீங்கள் தவறா?
மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் - 89259 44568
சபரிநாதன் - 89259 44569
தங்கலட்சுமி - 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!




















