செய்திகள் :

சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

post image

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துமாரியம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், முத்துமாரியம்மாளின் முதல் கணவரின் வீட்டில் இருக்கிறார்கள். சரண்ராஜும், முத்துமாரியம்மாளும் கொளத்தூரில் வசித்து வந்த நிலையில் சரண்ராஜ், மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

முத்துமாரியம்மாள்

இந்த நிலையில் நேற்று இரவும் (ஆகஸ்ட் 31-ம் தேதி) மது அருந்திவிட்டு சரண்ராஜ் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ், சமையலறையில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவி முத்துமாரியம்மாளை குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முத்துமாரியம்மாள், மயங்கி விழுந்தார். அதனால் பதறிப் போன சரண்ராஜ், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முத்துமாரியம்மாளை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

saranraj

இதையடுத்து முத்துமாரியம்மாளின் உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததால், கொளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூர் போலீஸார், முத்துமாரியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துமாரியம்மாள் எப்படி இறந்தார் என்று சரண்ராஜிடம் போலீஸார் விசாரித்தபோது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாக போதையில் உளறியிருக்கிறார். போதை தெளிந்த பிறகு அவரிடம் மீண்டும் விசாரித்தபோதுதான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சரண்ராஜை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீ... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் பவுண்டேஷன்: தொழில் தொடங்க கடனுதவி' - சைபர் கிரிமினல்கள் புது வழியில் மோசடி!

இணைய தளம் மூலம் மோசடி செய்பவர்கள் தங்களது மோசடிக்கு புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டமான எஸ்.ஐ.ஆர் மூலம்கூட சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை ஏம... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெ... மேலும் பார்க்க

தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது... மேலும் பார்க்க

சென்னை: ஒடிசா பெண் கொலை; உடலை கூறு போட்ட காதல் ஜோடி - பிரியாணி போல வேக வைத்தது ஏன்? |பகீர் தகவல்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹயத்துன்நிஷா (38). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான், ஹயத்துன்நிஷாவின் தலையைத் தவிர மற்ற உ... மேலும் பார்க்க

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்த... மேலும் பார்க்க