செய்திகள் :

Ambani: 17 வகையான சுவையில் வந்தாரா ஐஸ்கிரீம்; புதிய வியாபாரத்தில் இறங்கிய ஆனந்த் அம்பானி

post image

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது தொழிலை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்து நிர்வாகம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் எரிசக்தி மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலை ஆனந்த் அம்பானி வசம் ஒப்படைத்து இருக்கிறார். இதையடுத்து ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தங்கி இருந்து அத்தொழிலைக் கவனித்து வருகிறார்.

அதோடு ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் மறுவாழ்வு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் இந்த விலங்குகள் மையத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இருக்கின்றன.

தற்போது ஆனந்த் அம்பானி, வந்தாரா என்ற பெயரில் புதிய வகை ஐஸ்கிரீம்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறார். இதன் தொடக்க விழா மும்பையில் உள்ள ஜியோவேல்டு டிரைவ் சென்டரில் நடந்தது.

anand ambani with wife
anand ambani with wife

வந்தாராவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான ஏ.ஐ வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் புலி ஒன்று வந்தாரா ஐஸ்கிரீம் வாகனத்தை ஓட்டுவது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், Vantara Creamery ஐஸ்கிரீமானது ஃபில்டர் காபி, லெமன் சர்பெட், கொய்யா மிளகாய் மற்றும் மலாய் குல்ஃபி உள்ளிட்ட 17 சுவைகளை வழங்கும் என்று அந்தப் பிராண்ட் தெரிவித்தது.

இதன் மூலம் வந்தாரா நுகர்வோர் உணவுப் பிரிவிலும் தடம் பதிக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் குளிர்பானம் தொழிலில் இறங்கி இருக்கிறது. இப்போது ஆனந்த் அம்பானி சொந்தமாக உணவு தொழிலில் இறங்கி இருக்கிறார்.

"5,000 முதலீடு… 2 லட்சம் வருமானம் - ஹோம் மேக்கரிலிருந்து தொழிலதிபரான ஓபு உஷா"

"5,000 ரூபாய் முதலீடு… இன்று ரெண்டு லட்சம் மாத வருமானம். ஹோம் மேக்கரிலிருந்து தொழிலதிபரா எனக்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கேன். எனக்கு பிசினஸ் ஆரம்பிக்கனும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, பெரிய அளவில் முதலீ... மேலும் பார்க்க

VBJ: ரூ.5,000 கோடி வருவாயை நோக்கி 125 ஆண்டுகள் பழைமையான நகைக் கடை நிறுவனம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி நிறுவனத்துக்கு 125 ஆண்டுக்கால வரலாறு உள்ளது. 1900களில் குடியாத்தத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட உம்மிடி பங்காரு ஜுவல்லரி சென்னைக்கு வந்த பிறகு ... மேலும் பார்க்க

DRA: கலிபோர்னியாவின் ஸ்லேட் AI தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் டிஆர்ஏ நிறுவனம்!

வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும்,புதுமைகளை புகுத்துவதிலும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த டிஆர்ஏ,கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்லேட் டெக்னாலஜிஸ் இ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அடுத்த தேர்தல் எதையும் மாற்றாது; திரும்பி வந்துவிடுங்கள் இந்தியர்களே - ஶ்ரீதர் வேம்பு

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது..."அமெரிக்காவில் வாழும்... மேலும் பார்க்க

90% பிசினஸ் ஓனர்கள் செய்யும் 'மிகப்பெரிய நிதித் தவறு!' - உங்கள் லாபம் எங்கே போகிறது?

பல தொழில்முனைவோர்கள் (Business Owners) செய்யும் மிகப்பெரிய நிதித் தவறு என்ன தெரியுமா? கம்பெனியின் பணத்தையும், தங்கள் சொந்தப் பணத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதுதான். பிசினஸில் நல்ல லாபம் வரும்; அதை ... மேலும் பார்க்க