செய்திகள் :

ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

post image

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை 'அரசின் ஒரு பிரசாரகர்' என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு 'ANI பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரையை அதன் பக்கத்திலிருந்து நீக்க வேண்டும்' என உத்தரவிட்டது. 

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விக்கிபீடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ``நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இரண்டும் ஜனநாயகத்தின் அடித்தளத் தூண்கள். இதுதான் அரசியலமைப்பின் அடிப்படை அம்சம். ஒரு ஜனநாயகம் செழிக்க, இரண்டும் நிறைவாக தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்.

இரண்டும் திறந்த நிறுவனமாக எப்போதும் பொதுக் கண்காணிப்பு, விவாதம், விமர்சனம் போன்றவற்றுக்கு திறந்திருக்க வேண்டும். உண்மையில், நீதிமன்றங்கள் விவாதங்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

விவாதப் பிரச்னை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கியமான பிரச்னையும் மக்களாலும், பத்திரிகைகளாலும் விவாதிக்கப்பட வேண்டும்.

அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு நீதிபதிகள் பதிலளிக்க முடியாது என்பதையும் விமர்சிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு செய்தி நீதிமன்றத்தையோ அல்லது நீதிபதிகளையோ அவமதித்தால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால், நிச்சயமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் இதை நீக்கு, அதை அகற்று என ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல... நீதித்துறை உட்பட, எந்தவொரு அமைப்பின் முன்னேற்றத்திற்கும், சுயபரிசோதனை முக்கியமானது. பிரச்னைகள் குறித்து வலுவான விவாதம் நடந்தால் மட்டுமே சுயபரிசோதனை நடக்கும். எனவே, டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது." என்றனர்.

Tasmac : `அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள்’ - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அதன் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுடன், அதன் மூத்த... மேலும் பார்க்க

மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக... மேலும் பார்க்க

``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.``2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லா... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்... பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்த... மேலும் பார்க்க

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி... மேலும் பார்க்க