செய்திகள் :

'ATM மூலம் அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்' - ஒடிசா போன்று கேரளத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்

post image

​ஏ.டி.எம் மூலம் ​பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் ரேஷன் கடைகள் மற்றும் சப்ளைகோ விற்பனை நிலையங்களில் இந்தத் தானிய ஏ.டி.எம் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் ஒத்துழைப்போடு ஒடிசா அரசு முதலில் தானிய ஏ.டி.எம்-ஐ நிறுவியது. ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களும் இத்திட்டத்தைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் ​ஒடிசா மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் பின்பற்றி கேரளத்திலும் செயல்படுத்தப்படுகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 24 மணி நேரமும் இயங்கும் தானிய ஏ.டி.எம் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. ​பயனாளிகள் தானிய ஏ.டி.எம்மில் தங்களின் ரேஷன் கார்டு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ​ரேஷன் கடைகளில் உள்ளது போல பயோமெட்ரிக் முறை மூலம் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏ.டி.எம் மிஷின் ​சரிபார்த்த பிறகு, ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையை வழங்கும். ​5 நிமிடங்களுக்குள் 50 கிலோ வரை தானியங்களை இதில் பெற முடியும்.

கேரள உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப்
கேரள உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப்

கேரள மாநிலத்தில் மொத்தம் 13,915 ரேஷன் கடைகள் உள்ளன. ​மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரைவுபடுத்த இந்தத் தானிய ஏ.டி.எம்-கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்படுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தானியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இது புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பெரும் பயனளிக்கும்.

மேலும், ரேஷன் கடைகளில் நடக்கும் எடைக்குறைவுப் புகார்களுக்கும் இது தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள தானிய ஏ.டி.எம்
ஒடிசாவில் உள்ள தானிய ஏ.டி.எம்

அதே சமயம் கேரளத்தில் முழுமையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அது ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களையும், ஊழியர்களைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இதுகுறித்து கேரள உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் கூறுகையில், "இத்திட்டம் சோதனை அடிப்படையில் மட்டுமே தொடங்கப்படுகிறது. இது ரேஷன் கடை ஊழியர்களைப் பாதிக்காது" எனத் தெரிவித்தார்.

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க

மாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்?

தமிழ்நாட்டில் 'வருவாய் பெருக்குக் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மரிய வில்சன் என்ன சொல்கிறார்? இந்தக் குழு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், "கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மாநிலத்தி... மேலும் பார்க்க

மருத்துவர் முதல் அரசியல் வரை: ராமதாஸ் அரசியல் பயண முழு வரலாறு! | Timeline

1939-ல் விழுப்புரம் மாவட்டம் கீழ்விசிறி கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் ராமதாஸ் பிறந்தார்.1960-களில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 3... மேலும் பார்க்க