தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையி...
BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.
நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், "என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு.
உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது" என கம்ருதீன் பார்வதியிடம் சொல்கிறார்.

"நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு" என பார்வதி கம்ருதீனிடம் பேசுகிறார்.



















