செய்திகள் :

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! - போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி

post image

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

Dharmendra Pradhan
Dharmendra Pradhan

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களையும் மாணவர்களையும் அமைதியான முறையில் தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறு சி.ஜே.பி கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இணைந்து, சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

தங்களின் முதன்மைக் கோரிக்கையான கல்வி அமைச்சரின் ராஜினாமாவை அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

cjp protest in delhi
cjp protest in delhi

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து போலீஸ் வழக்குகள் மற்றும் எஃப்.ஐ.ஆர்-கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் எனவும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அரசு உறுதியளித்துள்ளது.

அத்தோடு, நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' - ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க

Dharmendra Pradhan: மாணவர்களின் தொடர் போராட்டம்; பதவியை ராஜினாமா செய்த மத்திய கல்வித்துறை அமைச்சர்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பி... மேலும் பார்க்க

அன்று கடும் கண்டனம், இன்று மெளனம்! - லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்?

திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்... இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களு... மேலும் பார்க்க

`ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது'- குடியரசு துணை தலைவர்

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் ம... மேலும் பார்க்க

ஈரோடு: கொரில்லா, ஓநாய் வேடத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு; காவல்துறை நூதனப் பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில... மேலும் பார்க்க