தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" - சீமா...
CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' - ஜே.பி.நட்டா
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.
இன்று மதியம் காக்ரோச் ஜனதா கட்சியுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக செயற்பாட்டாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் வைத்த...
> அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது,
> சமீபத்திய தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டன.
ஆனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகல் மட்டும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால், மத்திய அரசு, காக்ரோச் ஜனதா கட்சி இடையே நாளையும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இது குறித்து ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது...
"ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. அரசாங்கத்தின் சார்பாக நானும் என்னுடன் அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். அவர்களின் பேச்சுகளை நாங்கள் கேட்டோம்.
பேச்சுவார்த்தை சுமுகமான சூழலில் நடைபெற்றது மற்றும் பல கோணங்களில் அந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அவர்களின் முக்கியமான மூன்று கோரிக்கைகள் மற்றும் தேர்வுகளில் ஐந்து சீர்திருத்தங்கள் தொடர்பாக, நாங்கள் அவர்களிடம் நாளை பிற்பகலில் மீண்டும் உங்களைச் சந்திப்போம் என்று கூறியிருக்கிறோம்."
ஏற்கெனவே போராட்டக்காரர்களின் இரண்டு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலுக்கு மட்டும் மத்திய அரசு யோசனையில் இருக்கிறது.













