செய்திகள் :

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" - அமைச்சர் விஸ்வநாதன்

post image

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார்.

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக பெரிய வெற்றியைத் தமிழகத்தில் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியும், இப்போது தவெகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், "2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், மூன்று முறை, 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். 2029-இல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு நாங்கள் ஒத்த குரலில், ஒற்றைக்கட்டையாக நிற்போம்" எனப் பேசியிருக்கிறார்.

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! - காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க

Nepal Flood: "மக்களை அழைத்து வருவதே எங்களின் முதல் இலக்கு!'' - மீட்பு பணிகள் குறித்து வெங்கட நாராயணா

நேபாளத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளும் அங்குப் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி வரு... மேலும் பார்க்க

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' - கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்!

கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிரு... மேலும் பார்க்க

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தி... மேலும் பார்க்க

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடக்கம் முதலே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு பரந்தூர் மற்றும் சு... மேலும் பார்க்க

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற விபரமும் இடம் பெற்று இருக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் இல்லாத பள்ளிகள... மேலும் பார்க்க