செய்திகள் :

D55: பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் - மம்மூட்டி கூட்டணி; வேகமெடுக்கும் படப்பிடிப்பு

post image

அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். 'கர'வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட 'டி 55' படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடர்கிறது.

படப்பூஜையில்
படப்பூஜையில்

தனுஷின் 55வது படமாக 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது. இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா எனப் பலரும் நடிக்கின்றனர். Spy ஆக்ஷன் கதை இது என்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு கவனிக்கிறார். இதற்கு முன் 'ஸ்டார்', 'பைசன்' படங்களின் கேமராமேன் இவர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கெனவே இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஓப்பனிங் பாடலும் ஒன்று.

படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கும் என்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமியிடம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் மம்மூட்டி. அவர் நடிப்பில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் 'பேட்ரியாட்'டில் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரி டானியல் ஜேம்ஸ் ஆக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மம்மூட்டியுடன்...
மம்மூட்டியுடன்...

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் செங்கல்பட்டு, சென்னை என நடந்திருக்கிறது. சென்னையைத் தாண்டிய கிராமம் ஒன்றில் பிரமாண்டமான கோவில் திருவிழா அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது வந்தது. தேர்தலுக்காக சில நாட்கள் பிரேக்கில் இருக்கும் யூனிட், அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ். இந்த ஷெட்யூலில் ஸ்ரீலீலா காம்பினேஷனில் பாடல் காட்சியையும் படமாக்குகின்றனர். முந்தைய ஷெட்யூலில் மம்மூட்டி, தனுஷ் காம்பினேஷனும் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து
தமிழரசன் பச்சமுத்து

'டி 55' படத்தை ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் முடித்துவிட்டு அடுத்து 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்திற்குச் செல்கிறார் தனுஷ். மதுரை பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் இது என்கிறார்கள். படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது என்றும் இப்போது லொக்கேஷன் தேடலில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தமிழரசன் என்றும் தகவல்.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்க... மேலும் பார்க்க