செய்திகள் :

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

post image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்து நெரிசலில் தவித்திருக்கிறது

மூர்த்தி
மூர்த்தி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக விருப்ப மனுக்களை சமர்பிக்க மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தனர். ஏற்கனவே, அமைச்சர்கள் கீதா ஜீவன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.டி.ஆர், மனோ தங்கராஜ் போன்றோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

சில நிர்வாகிகள் படகில் வந்து விருந்து விருப்ப மனு தாக்கல் செய்வது, பேரணியாக வந்து விருப்ப மனு தாக்கல் செய்வது என ரகளை செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று மாசி மகம் மற்றும் பௌர்ணமி என நல்ல நாளாக இருப்பதால் முக்கிய அமைச்சர்கள் பலரும் விருப்ப மனு வாங்கி சமர்பிக்க அறிவாலயத்தில் கூடினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், மெய்யநாதன், மூர்த்தி என பலரும் தங்களில் லோக்கல் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களோடு அறிவாலயத்தில் கூடினர்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
மெய்யநாதன்
மெய்யநாதன்
பெரியகருப்பன்
பெரியகருப்பன்

அமைச்சர்களின் ஆதரவாளர்களின கார்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சில மணி நேரங்களுக்கு மவுண்ட் ரோடே ஸ்தம்பித்து போனது. அவசர பணியாக சென்ற பலரும் இதனால் அவதியுற்றனர். துணை முதல்வர் உதயநிதியும் இன்றைக்குதான் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் என தகவல் பரவ அவரை பார்க்கவும் ஏகப்பட்ட நிர்வாகிகள் அறிவாலயத்தில் கூடியிருந்தனர்.

6 ஆம் தேதி வரைக்கும் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து மவுண்ட் ரோடை பயன்படுத்தலாமா அல்லது ரூட்டை மாற்றலாமா என முடிவெடுப்பது சென்னை வாசிகளுக்கு நல்லது!

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர... மேலும் பார்க்க

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மா... மேலும் பார்க்க

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன்இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழ... மேலும் பார்க்க

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நில... மேலும் பார்க்க