செய்திகள் :

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

post image

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துதானே... கர்ப்பத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

தொடர்ச்சியான கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) என்பது ஒரு பெண்ணுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு அதாவது அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கிறது.

இதற்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு, மருத்துவர் தேவைப்பட்டால்  ஹெப்பாரின் (Heparin) எனப்படும் பிளட் தின்னர்  ஊசிகளைப் பரிந்துரைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

த்ரோம்போஃபிலியா (Thrombophilia) எனப்படும் பிரச்னை, அதாவது ரத்தம் எளிதில் உறையக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். இதனால் நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, குழந்தைக்கு வளர்ச்சித் தடை (IUGR) அல்லது கருவிலேயே குழந்தை இறந்துபோவது (IUD) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆன்டி-பாஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune issue) ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டால், கர்ப்ப காலம் முழுவதும் ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் லோ மாலிகுலர் வெயிட் ஹெப்பாரின் (LMWH) சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். இது ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும்.

சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பெற்றோரிடமிருந்து த்ரோம்போஃபிலியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புரதம் C (Protein C) அல்லது புரதம் S (Protein S) குறைபாடு போன்ற மரபணு ரீதியான காரணங்களாலும் ரத்தம் உறைய வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கலாம். அந்தப் பயமே தேவையில்லை.  கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. இது நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. எனவே, குழந்தைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தாயின் ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும்.

அதே சமயம், அனைத்து கருச்சிதைவுகளுக்கும் ஹெப்பாரின் மருந்து வழங்கப்படுவதில்லை. குரோமோசோம் பிரச்னைகள், கருப்பை பிரச்னைகள் அல்லது ஹார்மோன் குறைபாடுகள் உள்ளனவா என்று முதலில் பரிசோதிக்கப்படும்.

ஏபிஎஸ் டெஸ்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்தம் உறையும் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இத்தகைய சூழலில் ஹெப்பாரின் உயிர் காக்கும் மருந்தாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலேகிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில்இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தின... மேலும் பார்க்க

Apollo: 8000 ரோபோடிக் அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக செய்து சாதனைப் படைத்த அப்போலோ

அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals) பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு... நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று ந... மேலும் பார்க்க

டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறியஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் ... மேலும் பார்க்க

நாளை சூரிய கிரகணம் - கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதா? - மருத்துவர் விளக்கம்!

கிரகண நேரத்தில் வெளியே செல்லக் கூடாது, சாப்பிடக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது என்று காலம் காலமாக பல அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இதில் அதிகமான எச்சரிக்கைகள் சொல்லப்படுவது கர்ப்பிணிகளுக்குத்தான்.... மேலும் பார்க்க

Kerala: "மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம்" - ஆலின் ஷெரினின் பெற்றோர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜா... மேலும் பார்க்க