செய்திகள் :

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்... உடலா, மனதா... எதில் பிரச்னை?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது.  பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. 'இது உண்மையான பசியா இருக்காது... மனசுதான் காரணம்' என்று சிலர் சொல்கிறார்கள்.  உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்


ஏற்கெனவே எடை அதிகமாக இருப்பதால், உங்கள் மகனைப் போன்றவர்களுக்கு கொழுப்பின் சதவிகிதமும் அதிகமாகவே இருக்கும். அதன் விளைவாக சில ஹார்மோன்கள் முறையற்றுச் சுரக்கும். அதாவது பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன.  வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்படும்... நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.

இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும். 

எடை அதிகமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இந்த ஹார்மோன் பூஜ்ஜியமாக மாறாமல், 20 முதல் 30 சதவிகிதம் வரை மீண்டும் மீண்டும் சுரந்து கொண்டே இருக்கும். எனவே, ஹார்மோன் தொந்தரவுகளால் ஏற்படும் உணவுத் தேடலாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களால் இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் அதிகமிருக்கும். அதன் காரணமாக சரியான நேரத்துக்குச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் அதிகமிருக்கும். அதன் காரணமாக சரியான நேரத்துக்குச் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் பசியெடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். தாமதமாகத் தூங்கச் செல்வோருக்கு, தூங்குவதற்கு பல மணி நேரம் முன்னதாகச் சாப்பிட்டிருந்தால், விழித்திருக்கும் நேரத்தில் பசி எடுக்கும். அதனாலும் அவர்கள் கண்ட நேரத்தில் உணவுகளைத் தேடுவார்கள்... மீண்டும் மீண்டும் சாப்பிடுவார்கள்.

இந்தப் பிரச்னைகள் எல்லாமே உடலியல் தொடர்பான, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள்தான், உளவியல் பிரச்னை அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதைத் தவிர்த்து லேட் நைட் சாப்பாட்டைத் தேடுவோரையும் அதிகம் சாப்பிடுவோரையும் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்யவோ, காயப்படுத்தவோ செய்யாதீர்கள். முடிந்தால் அவர்கள் பிரச்னையைச் சரிசெய்ய, எடையைக் குறைக்க உதவுங்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகு

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

Doctor Vikatan:உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா... இரண்டு... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்...... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்து... மேலும் பார்க்க

"ஒரே பேஸ்ட் எல்லாருக்கும் சரியா? உங்கள் குழந்தைக்கு அது பாதுகாப்பா?" - மருத்துவர் விளக்கம்

குழந்தைகளுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது அம்மாக்களின் இயல்பு. பால் குடிக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும், அணியும் துணி மிருதுவாக இருக்க வேண்டும், சாப்பிடும் பொ... மேலும் பார்க்க

'பாதமே நலமா...' - சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

'ஆனந்த விகடன்' மற்றும் 'டாக்டர் ஆர். கே. நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவமனை' இணைந்து நடத்திய 'பாதமே நலமா' சீசன்-2 விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (29.03.2026) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது... மேலும் பார்க்க