செய்திகள் :

Doctor Vikatan: வழக்கமான சோடாவுக்கு மாற்றாகுமா டயட் சோடா... அது ஆரோக்கியமானதா?

post image

Doctor Vikatan: நான் முன்பெல்லாம் அடிக்கடி சோடா குடித்துக்கொண்டிருந்தேன். செரிமான பிரச்னை வந்தால் உடனே சோடா குடித்துவிடுவேன். ஆனால், அது தவறானது என்று சொல்லி என் நண்பன் டயட் சோடாவை அறிமுகப்படுத்தினான்.

அப்போதிலிருந்து டயட் சோடாவுக்கு மாறிவிட்டேன். சாதாரண சோடாவைவிட அது பெட்டரானதுதானே...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். 

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்குப் பதிலாகப் பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள்.

பருமன், சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல.

வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டடு பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட்பானங்கள் ஆபத்தானவை. இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக உடல் பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம்.

டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவைவிட பல மடங்கு அதிகம். இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் உடல் எடையும் கூடும்.

இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதைமாற்ற அளவும் குறையும், எனவே உங்கள் உடல் தினமும்  எரிக்கும் ஆற்றலின் அளவும் குறையும்.

கொழுப்பு
கொழுப்பு

அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும் குறிப்பாக அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.

அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். அதற்கு பதில் பிளாக்  டீ, ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை அருந்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா?

Doctor Vikatan:காலை டிபன் சாப்பிட்ட பிறகு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளில் சில நேரம் போடுவதற்கு மறந்துவிடுகிறேன். இந்த மாத்திரையை பகல் உணவுக்குப் பிறகு போடலாமா?பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்... மேலும் பார்க்க

ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா?

கடந்த மாதம், எழுத்தாளர் ராஜேஷ் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன் சாராம்சம் இது தான்..."ராஜேஷ் குமாருக்கு தெரிந்த ஒருவருக்கு பி.பி, சுகர் இருந்திருக்கிறது. இவர் ஒரு நாள் நல... மேலும் பார்க்க

``கண்ணுக்கு குளிர்ச்சி… உடலுக்கு? - சம்மர் ரோஸ் மில்க், ஜூஸ்களின் மறுபக்கம்!”

சம்மர் வந்துடுச்சுனா, ரோஸ் மில்க் பிங்க் நிறத்துல கண்ணைக் கவரும். ஜூஸ்கள் கலர்ஃபுல்லா வரிசை கட்டும். ஐஸ்கிரீம்கள் ‘வாங்க வாங்க’னு கூப்பிடும். வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன், ஒரு கப் குளிர்ந்த ஜூஸ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டீன் ஏஜ் மகளுக்கு ரத்தச்சோகை... 7-ஆகக் குறைந்த ஹீமோகுளோபின்; என்னதான் தீர்வு?

Doctor Vikatan: என் மகளுக்கு 16 வயதாகிறது. அவளுக்குத் தீவிரமான ரத்தச்சோகை பிரச்னை இருக்கிறது. ரத்தப் பரிசோதனை செய்ததில் ஹீமோகுளோபின் அளவு 7 என்று காட்டுகிறது. இது மிகவும் மோசமான நிலை என்கிறார் மருத்து... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு 10 மணி முதல் காலை 5.30 வரை தூக்கம்: ஆனாலும் சோர்வாக உணர்வது ஏன்?

Doctor Vikatan:தினசரி இரவு 10 மணிக்கு உறங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்துக்கு 5.30 மணிக்கு) எழுந்துவிடுவேன். சில நேரம் இரவு 12 மணிக்கு மேல் உறங்கினாலும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகி... மேலும் பார்க்க

மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார். அ... மேலும் பார்க்க