செய்திகள் :

Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025

post image

வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் ஸ்வக்கி நிறுவனம் உணவு தவிர்த்து மற்ற பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தை நடத்தி வருகிறது. அந்த வர்த்தக தளத்தில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்து இன்ஸ்டாமார்ட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் நடப்பு ஆண்டில் இன்ஸ்டாமார்ட்டில் ஒருவர் மட்டும் அதிக பட்சமாக ரூ.22 லட்சத்திற்கு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு காண்டம் மட்டும் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

பெங்களூரை சேர்ந்த ஒருவர் ரூ.10-க்கு பிரிண்ட்-அவுட் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஒரே ஆர்டரில் ரூ.4.3 லட்சத்திற்கு ஐபோன்களை வாங்கி இருக்கிறார். மும்பையை சேர்ந்த ஒருவர் ரூ.15 லட்சம் செலவு செய்து ஆன்லைனில் தங்கம் வாங்கி இருக்கிறார்.

மெட்ரோ நகரங்களை தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 10 மடங்கு அதிகமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி இருக்கின்றனர் என்கிறது ஸ்விக்கி. அடுத்த இரண்டு இடத்தில் லூதியானாவும், புபனேஷ்வரும் இருக்கிறது. கரிவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழம் போன்ற பொருட்கள் அதிக அளவில் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்படுகிறது.

பசுமைக்கு புகழ் பெற்ற கேரளா மாநிலம் கொச்சியில் கரிவேப்பிலை மட்டும் நடப்பு ஆண்டில் 368 முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் அதிக அளவில் ஆர்டர்கள் செய்யப்படுகிறது. டெலிவரி செய்ய வருபவர்களுக்கு பெங்களூரு மக்கள் ரூ.68 ஆயிரத்தை டிப்ஸாக கொடுத்து தங்களது தாராள மனதை காட்டி இருக்கின்றனர். ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரை 1092 கோடி நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்" - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000... மேலும் பார்க்க

`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க