செய்திகள் :

"ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது" - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?

post image

"ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்" என்று கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க டாக்டர் ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்த நிலையில், இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, 'கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ராமதாஸுக்குத் தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக அவரால் முடிவுகளை எடுக்க முடியாது, இதைப் பயன்படுத்தி ராமதாஸைச் சிலர் தவறாக வழி நடத்துகின்றனர்.

சிலரின் தூண்டுதலால் தன்னை தலைவர் எனத் தானே அறிவித்துக் கொண்டது பாமக சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சி நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை வழஙகலாம். ஆனால், பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது.

முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

எனவே கட்சிக் கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு தொடர ராமதாஸுக்கு உரிமை இல்லை. அன்புமணியின் பதவி காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை உள்ளது" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணை
நீதிமன்ற விசாரணை

இதைத்தொடர்ந்து அன்புமணியின் மனுவுக்கு ராமதாஸ் தரப்பில் மார்ச் 11க்குள் (இன்று) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி.

திருச்சி: "இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை... மேலும் பார்க்க

'நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா?' - நிர்வாகிகளிடம் ஜாலியாக தொகுதியை உறுதி செய்த விஜய்!

தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர்களை நேற்று பனையூரில் நேரில் அழைத்து விஜய் பேசியிருந்தார். அப்போது விஜய் தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதை நிர்வாகிகள் மத்தியில் ... மேலும் பார்க்க

சிலிண்டர் தட்டுப்பாடு: "உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமா? நான் தருகிறேன்" - நயினார் நாகேந்திரன்

திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "நாளை பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியி... மேலும் பார்க்க

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேற்காசியாவில் ... மேலும் பார்க்க

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க