செய்திகள் :

Ken-Betwa Link Project: பழங்குடியின மக்களின் நீண்ட போராட்டம் - வலுகட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை

post image

மத்தியப் பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 17 நாட்களாகத் தொடர்ந்து அனல் பறந்து கொண்டிருந்த 'சிதா அந்தோலன்' (Chita Andolan) போராட்டம், தற்போது காவல்துறையினரின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் எல்லையில் பாயும் கென் (Ken) நதியின் உபரி நீரை, வறட்சியால் தவிக்கும் பெட்வா (Betwa) நதிக்குக் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் பெரும் நதிகள் இணைப்புத் திட்டமான "கென்-பெட்வா இணைப்புத் திட்டம்" (Ken-Betwa Link Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் ₹44,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த 'தௌதான் அணை' (Daudhan Dam) மற்றும் கால்வாய்ப் பணிகளுக்காக, இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் சுமார் 24 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பன்னா புலிகள் காப்பகத்தின் (Panna Tiger Reserve) பெரும் பகுதியும் இதனால் பாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள பழங்குடியின மக்கள், தங்களுக்கு நியாயமான மறுவாழ்வுத் திட்டமும் தகுந்த இழப்பீடும் வழங்கக் கோரி பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள்.

சிதை போராட்டம் (Chita Andolan):

2026 ஏப்ரல் மாதத்தில், இப்பகுதிப் பழங்குடியினப் பெண்கள் சத்தர்பூரின் பரானா ஆற்றுப் படுகையில் எரியும் விறகுச் சிதைகள் போல அமைக்கப்பட்ட மரக்கட்டைகளின் மீது படுத்து போராடினர். "எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து எங்களை அப்புறப்படுத்துவது, எங்களை உயிரோடு சிதையில் ஏற்றுவதற்குச் சமம்" என குமுறுகின்றனர். தங்களுக்குரிய இழப்பீடான ₹25 லட்சம் முழுமையாகக் கிடைக்காததால் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

ஜூலை 2026 இல், பரானா ஆற்றின் பாலத்தின் அடியில் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு போராடும் அளவுக்குத் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் .

themooknayak

மத்தியப் பிரதேச அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய இந்தப் போராளிகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன் பிறகு, சத்தர்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், ஜூலை 19 அதிகாலையில் சம்பவ இடத்திற்குப் பெருமளவில் விரைந்தனர்.

ஆற்றுக்குள் சிதைப்படுக்கைகளில் அமர்ந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் போராட்டக்காரர்களைப் போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி, வாகனங்கள் மூலம் தற்காலிகமாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க