செய்திகள் :

MDR: மளிகைக் கடைகளில் UPI Payment செய்தால்கூட கட்டணமா? கஸ்டமர் தலையில் விழுமா இது? | Explained FAQ

post image

கையிலும், பர்ஸிலும் பணத்தை வைத்துக்கொண்டு, அதைப் பத்திரமாகப் பொத்திப் பொத்திக் கொண்டுபோய் வந்துகொண்டிருந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது.

இப்போதெல்லாம் எங்கே போனாலும் குறைந்தபட்சத் தொகையைக் கையில் வைத்துக்கொண்டு, மற்ற அமவுன்ட்டையெல்லாம் டிஜிட்டல் பேமென்ட் ஆப்ஸை நம்பிச் சென்றுவிடுகிறோம்.

இப்போது தள்ளுவண்டிக் கடை, பெட்டிக் கடை தொடங்கி எல்லா இடங்களிலுமே டிஜிட்டல் பேமென்ட்டுக்கான கியூஆர் கோடுகள் வந்துவிட்டன.

நம் மக்கள் டிஜிட்டல் பேமென்ட்டை ஈசியாக ஏற்றுக்கொண்ட முக்கிய காரணங்களில் ஒன்று - அதற்குக் கட்டணம் இல்லாததும்தான்.

ஆனால், இப்போது மத்திய அரசு, Merchant Discount Rate (MDR)-ஐ அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், சில டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளன.

UPI
UPI
அந்தக் கட்டணங்கள் குறித்து FAQ முறையில் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். வாங்க...

ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பணம் அனுப்பினால் கட்டணமா?

இல்லவே இல்லை. ஒரு தனிநபர் இன்னொரு தனிநபருக்குப் பணம் அனுப்பும்போதோ, ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரிடம் பணம் பெறும்போதோ எந்தக் கட்டணமும் இல்லை.

அனுப்பும்... பெறும் தொகை எத்தனை ரூபாயாக இருந்தாலும் கட்டணம் எதுவும் இல்லை.

பிறகு யாருக்குக் கட்டணம்?

ஒரு தனிநபர் ஒரு பிசினஸ் கணக்கிற்கு அதாவது வியாபாரிகளுக்குப் பணம் அனுப்பும்போதுதான் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.4 சதவிகிதமாக கட்டணம் வசூலிக்கப்படும்.

மளிகைக் கடை, ரோட்டுக் கடைகளில் ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், கட்டணம் வருமா?

மளிகைக் கடை, சிறு தொழில், ரோட்டுக் கடைக்காரர்களைப் பாதுகாக்க MDR-ல் முக்கிய நடைமுறை இருக்கிறது.

அதன்படி, ஒரு மாதத்திற்குக் கியூஆர் கோடு மூலம் பெறப்படும் யுபிஐ பேமென்ட் இவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், இவர்களுடன் நடக்கும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

பணம்
பணம்

ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்று ஏதோ சொல்கிறார்களே?

ஆம்... மேலே சொன்னவர்களைத் தாண்டி, வியாபாரிகளுக்கு ரூ.2,000 வரையிலான பேமென்ட் செய்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படாது. ரூ.2,000-க்கு மேலான பேமென்ட்டுகளுக்குத்தான் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

வசூலிக்கப்படும் கட்டணம் மத்திய அரசுக்குச் செல்லுமா?

MDR அல்லது NPCI என்பது மத்திய அரசு வசூலிக்கும் வரியோ, கட்டணமோ இல்லை.

இந்தக் கட்டணம் UPI நெட்வொர்க்கில் உள்ள வங்கிகள், பேமென்ட் ஆப்ஸுக்குச் செல்லும். இது UPI நெட்வொர்க் இயக்கத்திற்கும், அது இன்னும் விரிவடைவதற்கும் பயன்படுத்தப்படும்.

கட்டணம்... கட்டணம் என்று சொல்கிறார்களே... அதை யார் செலுத்த வேண்டும்?

MDR கட்டணம் கஸ்டமர்கள் கட்ட வேண்டியதில்லை. இந்தப் பேமென்ட்டுகளைக் கடைக்காரர்களும், பிசினஸ் செய்பவர்களும்தான் கட்ட வேண்டும்.

இந்தப் பேமென்ட் கடைக்காரர்கள், பிசினஸ்தாரர்களிடமிருந்து கஸ்டமர்கள் தலையில் விழாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்போது தனிநபர்களுக்கு எந்தக் கட்டணமுமே இல்லையா?

வங்கி மற்றும் NPCI நடைமுறைப்படி, ஒரு தனிநபர் ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். இந்தப் பரிவர்த்தனைக்குள் எந்தக் கட்டணமும் இல்லை.

யு.பி.ஐ பரிவர்த்தனை | UPI
யு.பி.ஐ பரிவர்த்தனை | UPI

கிளம்பியுள்ள எதிர்ப்புகள்

மத்திய அரசு இந்த MDR குறித்துப் பேசத் தொடங்கியதிலிருந்தே, எதிர்ப்புகள் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்தியப் பிரதமர் மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ என்று பிரசாரம் செய்தே மக்களிடையே UPI பழக்கத்தைக் கொண்டுவந்தார்.

தற்போது MDR என்று அமலுக்கு வந்தால், மீண்டும் மக்கள் பணத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வியாபாரிகள் இந்தக் கட்டணத்தைக் கஸ்டமர்களிடம் வசூலிக்கத்தான் அதிகம் முயல்வார்கள். இதை நேரடியாகச் செய்ய முடியவில்லை என்றால் தாங்கள் விற்கும் பொருள் அல்லது சேவைகளின் விலையை ஏற்றுவார்கள்.

இது கஸ்டமர்களுக்குப் பணச்சுமையை ஏற்றும்.

இதையெல்லாம் தவிர்க்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும்... இதை எப்படி நடைமுறைப்படுத்தும் போன்ற தெளிவான விளக்கங்களும், நடைமுறைகளும் வேண்டும்.

நெல்லை: அடர்காட்டுக்குள் பழங்குடியின காணி மக்கள்; நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு |Photos

நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!நெல்லை: பழங்குடியின காணி மக்களை காண அடர் காட்டுக்குள் நடந்து சென்று சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.!வாங்... மேலும் பார்க்க

``தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போல வேண்டுமென்று வடநாட்டில் ஏங்குகிறார்கள்"- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்தநாள் விழா நிகழ்வில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

CM Vijay: தமிழகத்தில் ரூ. 11,000 கோடி முதலீடு - முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்

முதல்வர் விஜய், தன்னுடைய முதல் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருக்கிறார். லண்டன் சென்றவர், கடந்த சனிக்கிழமை, லண்டனில் நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! - யார் யார் தெரியுமா?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல... மேலும் பார்க்க

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க