செய்திகள் :

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

post image

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்தியது.

நோட்டா
நோட்டா

இதற்கு முன்பு, ஒரு வாக்காளர் தனது வாக்கை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்றால் '49-O' என்ற விதியின் கீழ் தேர்தல் அதிகாரியிடம் படிவம் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த நடைமுறை வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், '49-O' பிரிவு வாக்களிப்பின் ரகசியத்தை மீறுவதாகக் கூறி ரத்துசெய்தது.

அதோடு நோட்டா என்கிற தேர்வை அனைத்து வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது இருந்துதான் நோட்டா அமலில் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்தியாவிலேயே முதன்முதலாக 2013-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் நோட்டா பயன்பாட்டிற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நோட்டா அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.

வாக்கு
வாக்கு

அதேபோல தற்போதைய விதிகளின்படி ஒரு தொகுதியில் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும், அதற்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

``வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" - சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டின் உரிமைக்குரல் - சட்டமன்றத்தை நோக்கி அருண்ராஜ்

திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் அருண்ராஜுக்கு ஆதரவான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் களத்தில் இறங்கி விசாரிக்கையிலும், 'அருண்ராஜ... மேலும் பார்க்க

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.இளை... மேலும் பார்க்க

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனி... மேலும் பார்க்க