``வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" - சாதி மதமற்றவன் சான்றிதழ் பெ...
NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes
ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்தியது.

இதற்கு முன்பு, ஒரு வாக்காளர் தனது வாக்கை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்றால் '49-O' என்ற விதியின் கீழ் தேர்தல் அதிகாரியிடம் படிவம் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறை வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், '49-O' பிரிவு வாக்களிப்பின் ரகசியத்தை மீறுவதாகக் கூறி ரத்துசெய்தது.
அதோடு நோட்டா என்கிற தேர்வை அனைத்து வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது இருந்துதான் நோட்டா அமலில் இருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முதலாக 2013-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் நோட்டா பயன்பாட்டிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நோட்டா அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.

அதேபோல தற்போதைய விதிகளின்படி ஒரு தொகுதியில் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும், அதற்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.















