செய்திகள் :

Paperless Judiciary: இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாவட்டமானது வயநாடு! பின்னணி என்ன?

post image

இந்திய நீதித்துறையில் வழக்கு தாக்கல் முதல் தீர்ப்பு வரை, காகிதப் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளன. வழக்கு தொடர்பான கோப்புகளைப் பராமரிப்பதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் களையும் முயற்சியாக நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடுகளைப் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர்.

நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு
நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு

இந்த நிலையில், இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட காகிதமில்லா மாவட்ட நீதித்துறை என்கிற மிகப்பெரிய முன்னெடுப்பு கேரள மாநிலம் வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறையால் வழக்குகள் மீதான வெளிப்படைத்தன்மை, கால விரையம், வழக்கு தொடுப்போருக்கான செலவீனங்கள் குறைப்பு போன்ற பல சாதகங்கள் இருப்பதாக நீதிபதிகள் பலரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் காகித பயன்பாடுகளை முற்றாக நீக்கியிருப்பதால் பசுமைத் துறையாக வயநாடு மாவட்ட நீதித்துறை உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு
நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு

கேரள மாநில உயர் நீதிமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், "நீதிமன்றங்கள் என்பவை மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கான பொதுச் சேவைகளை நடுநிலையாகவும் வெளிப்படையாகவும் வழங்க வேண்டும். வயநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்னெடுப்பு நம் நீதித்துறையில் மிகப்பெரிய மைல்கல்" என்றார்.

சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் பொருத்தப்பட்ட டிவைஸ்; வைரலான புகைப்படம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்

உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது.தீபிந்தர் கோயல்சி... மேலும் பார்க்க

இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் 'BlueBird Block-2' எதற்காக இந்த செயற்கைக்கோள்?

தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது. அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM... மேலும் பார்க்க

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம்.ஆனால... மேலும் பார்க்க

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை" - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் Microsoft AI Tour என்ற நிகழ... மேலும் பார்க்க

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில... மேலும் பார்க்க