செய்திகள் :

Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?

post image

இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இன்று தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

மழை
மழை

நாளை(நவம்பர் 25) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (நவம்பர் 26) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 27-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 28-ம் தேதி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வரும் 30-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.இது வ... மேலும் பார்க்க

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.! மேலும் பார்க்க

Rain Alert: "இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிற... மேலும் பார்க்க

தமிழ்நாடு: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 நாள்கள் தொடர் மழை! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்த... மேலும் பார்க்க

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாட்டில் அரியலூர்,... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.தற்போது இன்று இலங்கை நிலப்பரப்ப... மேலும் பார்க்க