செய்திகள் :

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

post image

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில், கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூல பத்திரம் இருப்பை அதிகமாகக் குறைத்துள்ளது. இதை அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் உறுதி செய்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

தரவுகள் என்ன சொல்கின்றன?

அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 241.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரத்தை வைத்திருந்திருக்கிறது.

கடந்த ஆண்டு (2025) அதே தேதியின் நிலவரத்தை எடுத்து பார்த்தால், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 190.7 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க கருவூல பத்திரம் மட்டுமே இருக்கிறது.

ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மிக குறைந்த அளவிலான அமெரிக்க கருவூல பத்திரம் வைத்திருப்பது இதுவே முதல் முறை.

காரணம் என்ன?

'அமெரிக்க கருவூலப் பத்திரம் இந்த நேரத்தில் நல்ல வருமானத்தைத் தரவில்லையா?' என்று பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை. 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க கருவூலப் பத்திரம் 4 - 4.8 சதவிகித வருமானத்தைத் தந்துள்ளது. இந்த நேரத்தில் தான், இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் இருப்பைக் குறைத்துள்ளது.

அமெரிக்க கருவூலப் பத்திரத்திற்கு பதிலாக, தங்கத்தின் பக்கம் தங்களது முதலீட்டைத் திருப்பியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

கடந்த செப்டம்பர் மாதம், மொத்த அந்நிய செலாவணியின் இருப்பில் 13.9 சதவிகிதம் தங்கத்தை வைத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதக் காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை 9 சதவிகிதம் தான் வைத்திருந்தது.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

இந்தியா மட்டுமல்ல... சீனா கூட அமெரிக்க கருவூலப் பத்திர இருப்பைக் குறைத்துள்ளது.

இதற்கு உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையே காரணம். இதனால், உலக வங்கிகள் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கையை வைக்கிறன. மேலும், ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைச் செய்து, ரிஸ்க்குகளைச் சந்திப்பதை மாற்றி, பல முதலீடுகளில் கவனம் செலுத்தலாம் என்று உலக வங்கிகள் நினைக்கின்றன.

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ... மேலும் பார்க்க

``உங்கள் கனவை சொல்லுங்கள்' என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் ஒன்று சேர்கிறதா?' - இணைப்புக்கு அஜித் பவார் ஆர்வம்!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் இரண்டாக உடைந்தது. இதனால் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் அஜித் பவார் பக்கம் சென்றனர்.... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 'ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்' - தொடங்கி வைத்த முதல்வர் | Photo Album

திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் ... மேலும் பார்க்க

`இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!

23 ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என வந்தவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிதான். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் அமைதியாகி விடுவார்கள். இப்போது காலம் கனிந்த... மேலும் பார்க்க

`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!' - போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம ம... மேலும் பார்க்க