``தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் இலவச அறிவிப்புகள்" - சீமான்...
RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆட்டத்தின் தொடக்கமே எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் வீசிய பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது.
அவர்கள் மிகச் சரியான லென்த்தில் பந்துவீசி எங்களுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தனர். இந்த மைதானத்தில் நாங்கள் இன்னும் பேட்டிங்கில் திறமையைக் காட்டி, 150 முதல் 160 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும்.
கிரிக்கெட்டில் சில நாட்களில் ஆடுகளம் இதுபோன்று பேட்டிங்கிற்குச் சாதகமில்லாமல் இருப்பது இயல்புதான், ஆடுகளம் சாதகமாக அமையும் போது, வீரர்கள் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.
அதனால் இந்தத் தோல்வியைக் கண்டு நான் விரக்தியடையவில்லை. இப்போதைய 'இம்பாக்ட் பிளேயர்' விதிகளால் எது சரியான இலக்கு என்று கணிக்க முடிவதில்லை. எங்களுடைய முயற்சி பலிக்கவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால் அவர்கள் சற்று பதற்றத்துடன் விளையாடி இருக்கலாம். ஆனால், முதல் போட்டியிலேயே பல தவறுகளைச் செய்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது ஒரு வகையில் நல்லதுதான்.
இந்தத் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம். இன்னும் மூன்று நாட்களில் அடுத்த ஆட்டம் இருப்பதால், வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் தயாராவதை உறுதி செய்வோம். இனிவரும் போட்டிகளில் எங்களின் ஆட்டம் நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்," என்று பேசியிருக்கிறார்.


















