செய்திகள் :

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

post image

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகைகுற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பயன்படுத்தி, பொது மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அபகரிப்பது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பான `எஸ்.ஐ.ஆர்’ பெயரைப் பயன்படுத்தியும் சைபர் மோசடி அரங்கேறி வருகிறது.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

வாட்ஸ் அப்பில், `ஏ.பி.கே (APK)’ ஃபைல்களை அனுப்பி, அதை கிளிக் செய்ய வைப்பதன் மூலமாக போனை `ஹேக்’ செய்து, சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுகின்றனர்.

இதனால், ``ஏ.பி.கே ஃபைல்கள் வாட்ஸ்அப்பில் வந்தால், அதை எக்காரணம் கொண்டும் `இன்ஸ்டாலேஷன்’ அல்லது `கிளிக்’ செய்ய வேண்டாம்’’ என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``வங்கிக் கணக்கில் உள்ள `ரிவார்டு’ பாயிண்ட்டுகளை பணமாக மாற்ற `SBI reward.apk’, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அபராதம் செலுத்த `RTO challan.apk’, வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்க `KYC/Aadhar update.apk’ போன்ற ஏ.பி.கே ஃபைல்களை அனுப்பி, பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் பி.எல்.ஓ-க்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

இக்காலக்கட்டத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப்பில், `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளரின் நிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள’ என்ற தலைப்பில், `SIR Election Commission.apk’ என்கிற ஏ.பி.கே ஃபைலை அனுப்பி வருகின்றனர்.

இப்படி வரும் ஏ.பி.கே ஃபைலின் லிங்க்கை இன்ஸ்டாலேஷன் அல்லது கிளிக் செய்வதன் மூலமாக தங்களுடைய போன் `ஹேக்’ செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் முழுவதுமாக எடுக்கப்படுகிறது. ஆகையால், வாட்ஸ் அப் குரூப்பில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் ஏ.பி.கே ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க