செய்திகள் :

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

post image

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகைகுற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பயன்படுத்தி, பொது மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அபகரிப்பது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பான `எஸ்.ஐ.ஆர்’ பெயரைப் பயன்படுத்தியும் சைபர் மோசடி அரங்கேறி வருகிறது.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

வாட்ஸ் அப்பில், `ஏ.பி.கே (APK)’ ஃபைல்களை அனுப்பி, அதை கிளிக் செய்ய வைப்பதன் மூலமாக போனை `ஹேக்’ செய்து, சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுகின்றனர்.

இதனால், ``ஏ.பி.கே ஃபைல்கள் வாட்ஸ்அப்பில் வந்தால், அதை எக்காரணம் கொண்டும் `இன்ஸ்டாலேஷன்’ அல்லது `கிளிக்’ செய்ய வேண்டாம்’’ என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``வங்கிக் கணக்கில் உள்ள `ரிவார்டு’ பாயிண்ட்டுகளை பணமாக மாற்ற `SBI reward.apk’, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அபராதம் செலுத்த `RTO challan.apk’, வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்க `KYC/Aadhar update.apk’ போன்ற ஏ.பி.கே ஃபைல்களை அனுப்பி, பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் பி.எல்.ஓ-க்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

இக்காலக்கட்டத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப்பில், `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளரின் நிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள’ என்ற தலைப்பில், `SIR Election Commission.apk’ என்கிற ஏ.பி.கே ஃபைலை அனுப்பி வருகின்றனர்.

இப்படி வரும் ஏ.பி.கே ஃபைலின் லிங்க்கை இன்ஸ்டாலேஷன் அல்லது கிளிக் செய்வதன் மூலமாக தங்களுடைய போன் `ஹேக்’ செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் முழுவதுமாக எடுக்கப்படுகிறது. ஆகையால், வாட்ஸ் அப் குரூப்பில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் ஏ.பி.கே ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு ... மேலும் பார்க்க

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து க... மேலும் பார்க்க

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1... மேலும் பார்க்க

வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜ... மேலும் பார்க்க

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால். இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய ... மேலும் பார்க்க