செய்திகள் :

SIR : `வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார்!’ - அமைச்சர் ஐ.பெரியசாமி

post image

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில்  3,24,894 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதில்  1,07,991 பேர் இறந்தவர்கள்,  முகவரியில் இல்லாதவர்கள் 1,44,816 பேர்,  முகவரி மாறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் 51,905 பேர், இரட்டைப் பதிவாக 20,182 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்களர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாக்கு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படுவதோடு புதிதாக 173 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்  திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,  " எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார். திண்டுக்கல்லில் விரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்போம்.

எஸ்ஐஆர் வரைவு வாக்காளார் பட்டியல் வெளியீடு

விஜய் அரசியல் கட்சியே கிடையாது அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. விஜய் முதலில் தேர்தல் களத்திற்கு வரட்டும் பின் அவரைப்பற்றி பேசலாம். அவரைப் பற்றி கருத்து ஏதும் இல்லை. 75 ஆண்டுகள் வருட பழமையான கட்சி திமுக. விஜய் இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்.

ஜனவரி 7ஆம் தேதி முதலமைச்சர்  ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு வரவுள்ளார். அது குறித்து நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்போம்” என தெரிவித்தார்.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க