செய்திகள் :

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

post image

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

SRH vs PBKS
SRH vs PBKS

வெற்றி குறித்து பேட் கம்மின்ஸ், "பஞ்சாப் அணி மிகவும் வலிமையான ஒரு அணி. அவர்களுக்கு எதிராக எங்கள் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்த விதம் மிகச்சிறப்பானது.

எவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்தாலும், பஞ்சாப் போன்ற ஒரு அணிக்கு எதிராகப் பந்துவீசி வெற்றி பெறுவது எளிதல்ல; ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்று மிகத் துல்லியமாகச் செயல்பட்டார்கள்.

நாங்கள் எப்போதும் எங்களது வேகத்திலேயே விளையாட விரும்புகிறோம். ஆரம்பத்தில் நிதானமாக ஆடுவது அபிஷேக் அல்லது டிராவிஸ் ஹெட்டின் ஸ்டைல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஸ்கோரை இலக்காக வைக்காமல், எவ்வளவு அதிக ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்கவே நாங்கள் முயல்கிறோம்.

எங்கள் சொந்த மைதானத்தில் இரவு நேரங்களில் விளையாடுவது எங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.

இன்றைய ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சற்று ஒத்துழைத்தது, அது எங்கள் பந்துவீச்சாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப எங்களால் எந்தச் சூழலிலும் எளிதாக மாற முடிகிறது.

SRH vs PBKS
SRH vs PBKS

தனிப்பட்ட முறையில் எனது பந்துவீச்சு இன்று மகிழ்ச்சி அளிக்கிறது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுப்பது சவாலாக இருந்ததால், இன்று சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

குறிப்பாக நான் வீசிய பவுன்சர்கள் நல்ல பலன் கொடுத்தன. எங்களிடம் நிதிஷ் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால் பந்துவீச்சில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

தற்போது நாங்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம். இந்த இடைவேளையில் முதலிடத்தில் இருப்பதை ரசித்துவிட்டு, அடுத்து வரும் போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன் விளையாடுவோம்," என அவர் தெரிவித்தார்.

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' - அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித... மேலும் பார்க்க

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' - ஆளூர் ஷாநவாஸ்

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்' தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக 'வழக்கறிஞர்' - நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

முன்னாள் எம்.பி செல்லக்குமார், சிட்டிங் அமைச்சர் அசோக்குமார் என இரண்டு 'வெயிட்டான' புள்ளிகளை எதிர்த்து, முதல் தேர்தலிலேயே கிருஷ்ணகிரி கோட்டையைத் தட்டித் தூக்கியிருக்கிறார் இந்த வழக்கறிஞர்.​யார் இந்த ம... மேலும் பார்க்க

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க